சஹ்ரானின் வெடிபொருட்களை காட்டிக்கொடுத்து 50 இலட்சம் ரூபா சன்மானம் பெற்ற சாரதி சாந்தலால்

0 1,110

சம்­மாந்­துறை செங்கல் கிரா­மத்­திலும், கல்­முனை சாய்ந்­த­ம­ரு­து­விலும் இயங்­கிய வெடி­பொ­ருட்கள் களஞ்­சி­யப்­ப­டுத்தி வைத்­தி­ருந்த இரு இடங்­களை கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பொலிஸார் கண்டு பிடித்­தனர். இவை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் நேரடித் தொடர்பு வைத்­துள்­ள­தாகக் கூறப்­படும் தேசிய தௌஹீத் அமைப்­புக்குச் சொந்­த­மா­ன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

நிந்­த­வூரில் உள்ள ஆயுத களஞ்­சிய நிலையம் பாது­காப்புத் தரப்­பி­னரால் சுற்றி வளைக்­கப்­பட்­ட­போது, அங்­கி­ருந்த தீவி­ர­வா­தி­களால் குண்டு வெடிக்கச் செய்­யப்­பட்­டது. அதன்­போது தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் தலைவர் எனக் குறிப்­பி­டப்­படும் ஸஹ்ரான் ஹாஷிமின் இரு சகோ­த­ரர்கள் உட்­பட 16 பேர் கொல்­லப்­பட்­டனர். இக்­குண்டு வெடிப்பில் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்த நிலையில் ஸஹ்­ரானின் மனை­வியும் அவ­ரது இளை­ய­ம­களும் பாது­காப்புத் தரப்­பி­னரால் மீட்­கப்­பட்­டனர்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளைப்­போன்று தேசிய தௌஹீத் ஜமா­அத்தால் மற்றும் இரு­வேறு பயங்­கரத் தாக்­கு­தல்கள் தொடுக்­கப்­ப­ட­வி­ருந்­தமை மயி­ரி­ழையில் காப்­பாற்­றப்­பட்­டுள்­ளது. மேற்­படி இரு வெடி­பொருட் களஞ்­சிய நிலை­யங்­களும் கண்­ட­றி­யப்­பட்­ட­த­னா­லேயே இடம்­பெ­ற­வி­ருந்த தாக்­கு­தல்கள் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

அரச புல­னாய்வுத் துறை அதி­கா­ரி­யொ­ரு­வ­ருக்குக் கிடைத்த இர­க­சிய தகவல் ஒன்றின் மூலமே மேற்­படி களஞ்­சிய இருப்­பி­டங்கள் கண்­ட­றி­யப்­பட்­டன.
வெடி­பொருட் களஞ்­சி­ய­சா­லைகள் பற்றி லொறிச் சார­தி­யொ­ரு­வரே இர­க­சியப் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கி­யுள்ளார்.

பல இடங்­களில் தாக்­குதல் தொடுக்­கப்­பட்டு, பாரிய உயிர் அழி­வுகள் தடுக்­கப்­படக் கார­ண­மாக இருந்த லொறி சாரதி உண்­மை­யி­லேயே ஒரு தேசிய வீரன்தான்.

பாரிய அழி­வி­லி­ருந்து மனித உயிர்­களைக் காப்­பாற்­றிய அந்த வீரன் நிட்­டம்­பு­வையைச் சேர்ந்த ஜன­ககே சாந்­தலால் என்­ப­வ­ராவார். இவ­ரது இப்­ப­ணியை மேலா­ன­தாகக் கருதி இவ­ருக்கு நன்­கொடை வழங்கி கௌர­விக்­கும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்­கி­ர­ம­ரத்­ன­வுக்கு பணிப்­புரை விடுத்தார்.

இவ்­வேண்­டுகோள் உட­ன­டி­யாக நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. சாரதி சாந்­த­லா­லுக்கு கடந்த ஜூலை 24 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் வாசஸ்­த­லத்தில் வைத்து ஜனா­தி­பதி 50 இலட்சம் ரூபா பணத்­தினைக் கைய­ளித்தார். ஜனா­தி­ப­தியின் அழைப்பின் பேரில் சாந்­த­லா­லுடன் மனை­வியும் அவ­ரது மூன்று பிள்­ளை­களும் ஜனா­தி­பதி மாளி­கைக்கு வருகை தந்­தி­ருந்­தனர். மற்றும் உயர் பொலிஸ் அதி­கா­ரி­களும் இவ்­வை­ப­வத்தில் கலந்­து­கொண்­டனர். சாந்­தலால் சிங்­கள ஊடகம் ஒன்­றுக்குக் கருத்துத் தெரி­விக்­கையில், தன்னை இனம் காட்டிக் கொள்­வ­தற்கு தான் ஒரு போதும் அஞ்சப் போவ­தில்லை என்று கூறி­ய­வாறு அவர் இது விட­ய­மாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­களை விப­ரித்தார்.

நான் எனது லொறியை கெப் சேவையில் இணைத்­துள்ளேன். நான் நிட்­டம்­புவை யிலுள்ள எனது வீட்டில் இருக்கும் போது ஏப்ரல் 9 ஆம் திகதி அந்த கெப் சேவை­யி­லி­ருந்து எனக்கு தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தது.

நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து அம்­பா­றைக்குப் போவ­தற்­கான ‘ஹயர்’ ஒன்று இருப்­ப­தா­கவும் நீர்­கொ­ழும்­புக்குப் போய் அந்த ஹயரை எடுக்­கும்­ப­டியே அந்த அழைப்பில் தெரி­விக்­கப்­பட்­டது. ஹய­ருக்­கு­ரி­ய­வரின் தொலை­பேசி இலக்­கமும் தரப்­பட்­டது. கிலோ­மீற்றர் ஒன்­றுக்கு 80 ரூபா வீதம் கட்­டணம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­பட்­டது. உரப்­ப­சளை வகைகள் கொண்டு செல்­வ­தென்றே ஆரம்­பத்தில் கூறப்­பட்­டது.

ஏப்ரல் 9 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கிரி­பத்­கொ­டை­யி­லி­ருந்து நீர்­கொ­ழும்பு நோக்­கிப்­பு­றப்­பட்டேன். நீர்­கொ­ழும்பு கட்­டு­வா­பிட்­டிய தேவா­லய வீதிக்கு வரும்­படி தொலை­பே­சியில் தெரி­விக்­கப்­பட்­டது. அந்த இடத்­திற்கு வரு­வ­தற்கு எனக்குப் பாதை தெரி­யாது என்றேன். உடனே நீர்­கொ­ழும்பு நவ­லோக்க வைத்­தி­ய­சாலை அருகே நிற்­கும்­படி கூறிஇ ஒரு மோட்டார் சைக்கிள் எனக்கு வழி­காட்­டி­யாக வந்­தது. அதனைப் பின் தொடர்ந்து கொங்­கிறீட் வீதி வழியே சென்று இரு மாடிகள் கொண்ட வீட்டின் முன் எனது லொறியை நிறுத்­தினேன். அப்­போது இரவு 11.00 மணி­யி­ருக்கும்.

அவ்­வீட்டில் 5 – 6 வாலி­பர்­க­ளுடன் வயது முதிர்ந்த ஒரு­வரும் இருந்தார். நான் வீட்டின் உள்ளே சென்­றதும் ஈச்­சம்­பழப் பெட்­டி­யொன்று எனக்குத் தரப்­பட்­டது. பசியால் அதனைப் பிரித்துச் சாப்­பிட முனைந்தேன். அப்­போது, அதனை எனது வீட்­டுக்குக் கொண்டு செல்­லும்­படி கூறி­ய­வாறு பிறி­தொரு பாத்­தி­ரத்தில் போடப்­பட்ட ஈச்­சம்­ப­ழங்கள் தரப்­பட்­டன. அவற்றைச் சாப்­பிட்டேன்.

நீண்ட தூரப்­ப­யணம் என்­பதால் சற்று உறங்­கும்­படி கூறி­னார்கள். இது விட­யத்தில் நான் நன்கு பழக்­கப்­பட்­டவன் என்று கூறி நான் தூங்­க­வில்லை.
வொஷின் மெஷின், பிரிஜ், கேஸ் சிலிண்டர், கேஸ் அடுப்பு, கதி­ரைகள், பிளாஸ்ரிக் பெரல்கள் உள்­ளிட்ட பொருட்­களை அவர்கள் லொறியில் ஏற்­றினர். பிளாஸ்ரிக் பெரலில் என்ன உள்­ளது என வின­வினேன். அவற்றில் சல்­பூரிக் அமிலம் இருப்­ப­தாக ஒருவர் கூறினார். தாம் தங்க நகைக் கடை­யொன்று ஆரம்­பிக்கப் போவ­தா­கவும் அதற்கு சல்­பூரிக் அமிலம் தேவைப்­ப­டு­வ­தா­கவும் விளக்­க­ம­ளித்­தனர். பிளாஸ்ரிக் பெரல்கள் நன்கு பாரம் கொண்­டவையாகக் காணப்­பட்­டன. ரெஜிபோம் பெட்­டி­களும் ஏற்­றப்­பட்­டன. மேற்­படி பொருட்­களால் லொறி நிரம்­பி­விட்­டது.

அவ்­வீட்­டி­லி­ருந்­த­வர்­களில் நல்ல தோற்­ற­மு­டைய ஒரு­வரும் லொறியில் ஏறிக் கொண்டார். லொறி பய­ணத்தை ஆரம்­பித்­தது. கட்­டானை பொலிஸ் நிலை­யத்­தையும் தாண்­டி­யது. அப்­போது லொறியில் வந்­த­வரும் நானும் கதைத்­த­வாறு பய­ணித்துக் கொண்­டி­ருந்தோம். நான் அவரின் வயதைக் கேட்டேன். 43 என்றார். நானும் அதே வய­து­டை­யவன் என்றேன். பய­ணத்தின் இடையே பொலன்­ன­று­வை­யூ­டாக மட்­டக்­க­ளப்­புக்கு செல்வோம் என்றார் அவர். மஹி­யங்­கனை வழி­யாக அம்­பா­றையை அடை­வ­துதான் சரி­யான பாதை என்றேன் நான். கல்­மு­னைக்கும் செல்ல வேண்­டி­யுள்­ளதால், பொலன்­ன­றுவை வழி­யாகச் செல்­லும்­படி கேட்டுக் கொண்டார். நான் எமது கெப் சேர்­வி­ஸுக்கு இது குறித்து அறி­வித்து விட்டு அவர் கூறி­ய­வாறே பய­ணித்தேன். எங்கள் உரை­யாடல் தொடர்ந்­தது. இரு­வ­ரதும் வாழ்க்கை வர­லா­றுகள் பரஸ்­பரம் பகிர்ந்து கொள்­ளப்­பட்­டன. லொறியில் வந்­தவர் குறிப்­பி­டு­கையில், அவர் முதலில் புடைவைக் கடை­யொன்றை நடத்தி அதன் மூலம் நல்ல முன்­னேற்றம் கண்­டுள்ளார். இவ­ரது வளர்ச்சி கண்ட கடைக் கட்­டிட உரி­மை­யாளர் பொறாமை கொண்டு கடையைக் கேட்­டுள்ளார். அதனால் கடையை ஒப்­ப­டைத்து விட்டு தங்­க­நகை தயா­ரிக்கும் தொழிலில் இறங்­கி­யுள்ளார். அதிலும் விருத்­தி­ய­டைந்­துள்ளார். இலங்­கை­யி­லுள்ள பெரிய நகை வியா­பாரக் கடை­க­ளுக்கும் தானே நகைகள் தயா­ரித்துக் கொடுப்­ப­தா­கவும் அவர் பெரு­மை­யாகக் கூறினார். மேலும் தனக்குக் கீழ் தொழில் புரி­ப­வர்­க­ளுக்கும் இரண்டு மூன்று இலட்சம் ரூபா அளவில் மாதாந்தம் கொடுப்­ப­னவு வழங்­கு­வ­தா­கவும் கூறினார்.

அதி உச்ச சம்­பளம் அல்­லவா கொடுக்­கி­றீர்கள் என்று நான் ஆச்­ச­ரி­யத்­துடன் கூறினேன். அவர்கள் செய்­கிற நகை­க­ளுக்­கு­ரிய கமி­ஷ­னா­கவே தான் மேற்­படி பாரிய தொகை வழங்­கப்­ப­டு­கி­றது. இப்­போது நாம் சம்­பா­தித்­தது போதும். எமது ஊழி­யர்கள் முன்­னேற வேண்டும் என்­ப­தற்­கா­கவே அவர்­களை நன்கு கவ­னித்து வரு­கிறேன் என்று அவர் கூறினார்.

நான் எனது நிலை­மை­யையும் எடுத்­துக்­கூ­றினேன். வியா­பாரம் செய்­யப்போய் நான் நாலா­பு­றங்­க­ளிலும் கட­னா­ளி­யா­கி­விட்டேன். மிகவும் கஷ்­டத்­து­டனே காலம் கடத்தி வரு­கிறேன். லொறிக்­கு­ரிய பினான்ஸ் பணத்தைச் செலுத்­தவும் கூட சிர­மப்­ப­டு­கிறேன் என்­றெல்லாம் எனது நிலை­யையும் எடுத்­து­ரைத்தேன். இவ்­வாறு கதைத்­த­வாறு பய­ணித்து, மறுநாள் 10 ஆம் திகதி காலை 5.30 மணி­ய­ளவில் கது­ரு­வெ­லையை அடைந்தோம். அங்கு ஒரு பள்­ளி­ய­ருகே வாக­னத்தை நிறுத்­தும்­படி கூறினார். அவர் பள்­ளிக்குச் சென்று வழி­பாடு செய்­து­விட்டு மீண்டும் வந்தார். அங்­கி­ருந்து மட்­டக்­க­ளப்பை நோக்கிப் போய்க்­கொண்­டி­ருக்­கையில், பெரிய காட்டு யானை­யொன்று பாதைக்குக் குறுக்கே நின்­றது. நான் சிர­மத்­துடன் பிரேக் அடித்து லொறியை நிறுத்­தினேன். யானையின் அரு­கேதான் வாகனம் போய் நின்­றது. ஆனால் அது உதை­விட்­டி­ருந்தால் வாக­னமும் நாமும் நாசம்தான். ஒரு­வாறு அது பாதையை விட்­ட­கன்­றதும் தப்­பினோம் பிழைத்தோம் என்­ற­வாறு பய­ணத்தைத் தொடர்ந்தேன். காலை 7.00 மணி­ய­ளவில் மட்­டக்­க­ளப்பை அடைந்தோம். 

அங்கு தனியார் வங்­கி­யொன்­றுக்குச் சென்று பணம் எடுத்து வந்தார். தொடர்ந்து கல்­மு­னையை நோக்கிப் பய­ணித்தோம். கல்­மு­னைக்குப் போகும் பாதை எனக்கும் தெரி­ய­வில்லை. அவ­ருக்கும் தெரி­ய­வில்லை. வீதியில் ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் பாதையைக் கேட்­ட­வாறே சென்றோம். பின்னர் ஒரு­வாறு சம்­மாந்­து­றையை அடைந்தோம். அங்கு பள்­ளி­வாசல் ஒன்றின் அருகே வாக­னத்தை நிறுத்­தினேன். அப்­போது மோட்டார் சைக்­கிளில் வந்த முஸ்லிம் ஒரு­வ­ருடன் சுமார் 10 நிமி­டங்கள் வரையில் லொறியில் வந்­தவர் கதைத்துக் கொண்­டி­ருந்தார். பின்னர் அந்த மோட்டார் சைக்­கிளைப் பின் தொட­ரு­மாறு கூறவே நான் அவ்­வாறு சென்று ஒரு வீட்டை அடைந்தேன். அங்கு அழ­கான பெண் பிள்­ளையும் வய­தான தாய் ஒரு­வரும் இருந்­தனர். அப் பெண்­பிள்­ளையே வீட்டு முன் கேட்டைத் திறந்தார். இர­சா­யன திரவ பெரல்கள், உரப் பசளை மூடைகள் போன்ற பாதிப் பொருட்கள் அங்கு இறக்­கப்­பட்­டன. அங்கு கைகளைக் கழு­வி­யதன் பின்னர் கல்­மு­னைக்குப் போனோம். அப்­போதும் கைப்­பே­சியில் பெண்­ணொ­ரு­வ­ருடன் மிகவும் அன்­பொ­ழுகக் கதைப்­பதை என்னால் உணர முடிந்­தது. கல்­மு­னை­யிலும் ஒரு வீட்­ட­ருகே நிறுத்­தும்­படி பணிக்­கப்­பட்டேன். அங்கும் வய­தான ஒரு தாய் இருந்தார். லொறியில் எஞ்­சி­யி­ருந்த எல்லாப் பொருட்­களும் அங்கு இறக்­கப்­பட்­டன. இது வரை 360 கிலோ­மீற்றர் பய­ணித்­தி­ருந்தோம். வாகனக் கட்­ட­ண­மாக 28000 ரூபா எனக்குத் தரப்­பட்­டது. என்­னுடன் லொறியில் வந்­தவர் மோட்டார் சைக்­கிளில் வந்­த­வ­ருடன் பய­ண­மாக நானும் நிட்­டம்­பு­வையை நோக்கித் திரும்­பினேன்.

நான் திரும்பி வரும்­போதும் நன்றிக் கட­னுக்­காக என்­னுடன் வந்­த­வ­ருடன் தொலை­பே­சியில் பல முறை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் பதி­ல­ளிக்­க­வே­யில்லை. வீட்­டுக்கு வந்த பின்­னரும் நான் வீடு வந்­ததை அறி­விக்கத் தொடர்பு கொண்­ட­போதும் பதி­ல­ளிக்­க­வில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற பின்­ன­ரான தனது மனோ நிலையை சாரதி சாந்­தலால் கூறு­கையில்,

ஏப்ரல் 21 ஆம் திகதி காலையில் எனது நண்பர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து எனக்கு தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தது. கொழும்பில் பல இடங்­களில் குண்டு வெடிப்புச் சம்­ப­வங்கள் நடக்­கின்­றன. கொழும்­புக்கு வர­வேண்டாம் என்று நண்பர் தொலை­பேசி மூலம் தெரி­வித்தார். உடனே நான் வீட்டுத் தொலைக்­காட்­சியில் நிகழ்­வு­களைப் பார்த்தேன். நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை, கட்­டு­வா­பிட்­டிய, மட்­டக்­க­ளப்பு ஆகிய பகுதி தேவா­ல­யங்­களில் குண்டு வெடிப்புக் காட்­சிகள் ஒளி­ப­ரப்­பப்­பட்­டுக்­கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்தேன். நான் கட்­டு­வா­பிட்­டிக்குச் சென்று பொருட்கள் ஏற்­றிச்­சென்ற சம்­பவம் என் நினை­வுக்கு வந்­தது. அங்கு போய்ப் பார்த்து வரு­வோமா என்று என் மனம் தூண்­டி­யது. என்­றாலும் பயம். அத்­துடன் என் மனை­வியும் என்னைத் தடுத்தார். பின்னர் நொச்­சி­யா­க­மயில் அமோ­னியா திர­வத்­துடன் ஒருவர் கைதான தகவல் தொலைக்­காட்­சியில் தெரி­விக்­கப்­பட்­டது. நான் லொறியில் ஏற்­றிச்­சென்ற சல்­பூரிக் அமிலம் குறித்து எனது சிந்­தனை பல­மாக இயங்­கி­யது. குண்­டுகள் தயா­ரிக்கத் தானோ இவை கொண்டு செல்­லப்­பட்­டன என்ற சந்தேகம் என்னை ஆட்கொண்டது.

இது குறித்து பொலிஸாரிடம் முறையிட்டால் என்னைக் கைது செய்வார்களோ என்ற பீதி இதற்கு மத்தியில் வெயாங்கொடை நைவலயில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிரிவர்தன என்பவர் விமானப் படையிலிருந்து, ஓய்வு பெற்றவர். இவர் உட்பட இதர நண்பர்களிடம் விடயத்தை முன்வைத்தேன். அதன் மூலமே அவர்களால் இரகசியப் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரச புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னிடம் அடியிலிருந்து நுனிவரையிலும் விபரங்களைக் கேட்டறிந்து செயலில் இறங்கினார்.

நான் பொருட்கள் இறக்கிய வீடுகளைக் காண்பிப்பதற்காக என்னை கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். நான் கூறிய பாதைத் தடயங்களை வைத்து சிரமங்களுக்கு மத்தியில் குறித்த வீடுகளை அடையாளம் காட்டினேன். அதன் மூலமே அங்கிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. எனது இந்த உதவிக்காகவே ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் 50 இலட்சம் ரூபா அன்பளிப்புக்கிடைத்தது என்று சாந்தலால் கூறினார்.

சிங்­க­ளத்தில்: ஸ்ரீனாத் பிர­சன்ன ஜய­சூ­ரிய

தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

நன்றி: லங்காதீப வார இதழ்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.