காவி உடை­ தரித்தோரிடம் நாட்டைத் தாரை­வார்ப்­போமா?

0 1,016

நீதியை, ஒழுக்­கத்தை நேசிக்கும் மக்கள் நாட்­டிலே தங்கள் பாட்டில் அமை­தி­யாக வாழ்ந்து வரு­கையில் காவி­த­ரித்த காடை­யர்­க­ளாகச் சில பிக்­குகள் நாட்­டையே குழப்­பிக்­கொண்டு, இன­வா­தத்தைத் தூண்டி, சட்­டத்தின் ஆட்­சிக்கே சவால்­விட்டுக் கொண்டு சுதந்­தி­ர­மாக இயங்கி வரு­கின்­றனர்.

ராஜ­பக்ச சிந்­த­னையால் உரு­வாக்கிப் போஷிக்­கப்­பட்டு வளர்க்­கப்­பட்ட இவர்­க­ளுக்கு சட்­டத்தின் பாது­காப்பும் இருப்­ப­தாகத் தெரி­கி­றது. இக்­காவிப் பயங்­க­ர­வாதம் இப்­போது அதன் உச்­சத்தைத் தொட்­டுள்­ளது. நாட்டின் சட்­டமும் சட்­டத்தின் ஆட்­சியும் இவர்­களின் கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­து­விட்­ட­தா­கவே தோன்­று­கி­றது. சட்­டத்தின் ஆட்­சிதான் நடக்­கி­றதா என்று வியப்­ப­டைய வேண்­டிய நிலையில் அர­சாங்கம் கைய­று­நி­லையில் இருக்க, அர­சியல் தலை­வர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு கிடக்­கி­றார்கள்.

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டில் 18 ஆண்­டுகள் சிறைப் படுத்­தப்­பட்­டி­ருந்த ஒரு பிக்கு, ஜனா­தி­ப­தியின் எதேச்­சா­தி­கா­ரத்தைக் கொண்டு மன்­னிப்­ப­ளித்து, விடு­விக்­கப்­பட்­டுள்ளார். குற்­ற­வா­ளி­களை சிறைப்­ப­டுத்தி வைப்­பதன் நோக்­கங்­களுள் ஒன்று, குற்­ற­வா­ளி­களைச் சமூ­கத்­தி­லி­ருந்து தனி­யாக்கி, பிரித்­து­வைப்­ப­த­னூ­டாக, அக்­குற்­ற­வா­ளி­களின் செயற்­பா­டு­களால் கொஞ்ச காலத்­திற்­கேனும் சமூகம் பாதிக்­கப்­படக் கூடாது என்­ப­தாகும்.

இந்த அடிப்­ப­டை­யைக்­கூடக் கவ­னத்திற் கொள்­ளாமல் ஜனா­தி­பதி சிறி­சேன, அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட சட்ட, தர்ம நிய­மங்­க­ளை­யெல்லாம் துச்­ச­மாகப் புறந்­தள்ளி, இவ்­வாறு மன்­னிப்­ப­ளித்­தி­ருப்­பதன் மூல­மாக, போத்­தலின் மூடியைத் திறந்து பூதத்தை வெளியே திறந்து விட்­டுள்ளார். அந்தப் பூதமோ உச்­ச­கட்டப் பேயாட்­டத்தில் இறங்கி, சட்­டத்­தையும் சட்ட ஆட்­சி­யையும் சட்­டத்தின் காவ­லர்­க­ளையும் ஆட்­சி­யா­ள­ரையும் சக­வாழ்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் நாசப்படுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.

இந்தப் பேர­ழி­வுக்­கான பொறுப்பை நேர­டி­யாக ஜனா­தி­பதி பொறுப்­பேற்க வேண்­டாமா? ஆகக்­கு­றைந்த பட்சம், இத்­த­கைய காடை­யர்­களைக் கட்­டுப்­ப­டுத்தத் தன் நேரடிக் கட்­டுப்­பாட்டில் உள்ள சட்ட, ஒழுங்கு அமைச்சின் அதி­கா­ரங்­க­ளை­யா­வது பயன்­ப­டுத்தக் கூடாதா?

இவ்­வாறு எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­டா­ம­லி­ருப்­பது, ஜனா­தி­ப­திக்கும் இந்தக் காவிக் காடை­யர்­க­ளுக்கும் இடையே உள்ள மறை­மு­க­மான இணக்­கப்­பா­டுகள், ஒத்­து­ழைப்­புகள் கார­ண­மா­கவா?

குரு­நாகல் வைத்­தியர் ஒருவர் குறித்து திவ­யின பத்­தி­ரிகை வெளி­யிட்ட போலி­யான செய்­தியால் நாட்டில் ஏற்­பட்­டுள்ள கல­வரச் சூழ்­நிலை இன்­று­வரை தொடர்­வ­தோடு மேலும் மேலும் அதைத் தீவி­ரப்­ப­டுத்தும் தீவிர முயற்­சியில் காவி­த­ரித்த இன்­னொ­ருவர் முழு­மூச்­சாக ஈடு­பட்டு வரு­கிறார். இவர், நீதி­மன்ற வளா­கத்­துக்கு வெளியே நின்­று­கொண்டு ஆக்­ரோ­ஷ­மாகக் கத்­து­கிறார், கோபத்தில் வெடித்துச் சத்­த­மிட்டு, குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­கள அதி­கா­ரி­களை, சட்­டமா அதிபர் திணைக்­கள அலு­வ­லர்­களை, பொலிஸ் அதி­கா­ரி­களை எல்லாம் கண்­ட­படி விமர்­சிக்­கிறார், திட்­டு­கிறார், எச்­ச­ரிக்­கிறார், அச்­சு­றுத்­து­கிறார்! இவரின் நடத்­தை­யா­னது ‘பஜார் எக்கே சண்­டியா’ தெருச் சண்­டியன் போலவே உள்­ளது.

இதி­லுள்ள பேரா­பத்து என்­ன­வென்றால் – இவ­ரது இச்­செ­யற்­பா­டுகள் மிகத்­தெ­ளி­வாக, நேர­டி­யா­கவே நீதி­மு­றைமைச் செயற்­பாட்டின் சுயா­தீ­னத்தை, சுதந்­தி­ரதை அச்­சு­றுத்­து­வ­தாகும்! தினமும் இது நடந்து வரு­கி­றது. சாட்­சி­யா­ளர்கள் அச்­சு­றுத்­தப்­ப­டும்­போது, விசா­ரணை அதி­கா­ரிகள் மீது எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­டும்­போது நீதி எவ்­வாறு நிலை­நாட்­டப்­பட முடியும்?

தான் சொல்­வதே உண்மை, தான் சொல்­வது போலவே நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும், இதற்­கப்பால் எது­வு­மில்லை என்று சொல்­வதைப் போலவே இந்த நப­ரு­டைய தீவி­ர­வாதச் செயல்கள் காணப்­ப­டு­கின்­றன!

பார்த்த பார்­வை­யி­லேயே பொய்­யெனத் தோன்றும் திவ­யின வெளி­யிட்ட குறித்த செய்­தியால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது டாக்டர் ஷாபி மட்­டு­மல்ல! இந்­நாட்டில் வாழும் நீதியை நேசிக்கும் சட்­டத்தை மதிக்கும் சட்ட ஆட்­சியை அவாவும் இனச் சுமு­கத்தை ஆரா­திக்கும் ஒவ்­வொரு பிர­ஜையும் இப்­பொய்­யான செய்­தியால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கும் நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும். இவ்­வா­றாக நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டு­மானால் காவிக் காடை­யர்கள் சொல்லும் வித­மாக, விரும்பும் படி­யாக மட்டும் சட்டம் செயற்­படக் கூடாது. அவர்கள் சொல்­வதை மட்­டுமே கேட்­டுக்­கொண்டு அவர்­க­ளுக்குத் தேவை­யான தீர்ப்பை நீதி­மன்றம் கொடுத்­து­விடக் கூடாது. விஞ்­ஞான ரீதி­யான, சட்­டப்­ப­டி­யான விசா­ர­ணைகள், பக்­க­சார்­பற்ற ஆய்­வு­களின் பின்­னரே விட­யங்கள் தீர்­மா­னிக்­கப்­பட வேண்டும்! எனவே சட்­டப்­ப­டி­யான, விஞ்­ஞா­ன­பூர்­வ­மான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்கப் படு­வதைத் தடுப்­ப­தற்கோ இடை­யூறு செய்­வ­தற்கோ எவ­ருக்கும் அதி­காரம் இருக்கக் கூடாது. அவ்­வாறு தலை­யீடு செய்வோர், தடுப்போர் யாராக இருந்­தாலும் அவர் இந்­நாட்டின் மொத்தச் சட்­டத்­துக்கும் சட்­டத்தின் ஆட்­சிக்­குமே எதி­ராகச் செயற்­ப­டு­கிறார். இக் காவிக்­கா­ரரும் இவ்­வா­றான வேலை­க­ளையே செய்து கொண்­டி­ருக்­கிறார். நீதி­யான, நியா­ய­மான எல்லா விசா­ர­ணை­க­ளிலும் தலை­யி­டு­கிறார். தன்­னு­டைய எதிர்­பார்ப்பு நிறை­வேறும் வரை­யிலும் பைத்­தியம் பிடித்­தவர் போலவே செயற்­ப­டு­கிறார்.

ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்­திற்கோ பிர­த­மரின் வாசஸ்­த­லத்­திற்கோ முறை­யான முன்­ன­னு­மதி இன்றி எவ­ரா­வது நினைத்த நேரத்தில் அத்­து­மீறி உள்ளே நுழை­ய­லாமா? எவ­ரா­வது சாதா­ரண ஒரு பொது­மகன் அவ்­வாறு செய்தால் அவர் மீது சட்டம் எப்­படிப் பாயும்? எனினும் காடையர் போலச் செயற்­படும் காவி­தா­ரிகள் தம்­மிஷ்­டப்­படி எல்லா விட­யங்­க­ளையும் செய்­வது எப்­படி? காவி­தா­ரி­க­ளுக்கு எதி­ராக இந்­நாட்டுச் சட்­டங்கள் செயற்­ப­டா­தி­ருப்­பது எப்­படி? ஏன்?

அவர்­களின் அத்­து­மீ­றல்­களை உட­னுக்­குடன் அவ்­வப்­போது எதிர்­கொள்ள முடி­யாமற் போனாலும் பின்­ன­ரா­வது அதற்­காக உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்க முடி­யாதா? சட்­டத்தை மீறிச் செயற்­ப­டு­வ­தற்­கான அனு­ம­தியை காவிக்­கா­ரர்­க­ளுக்கு வழங்­கி­யது யார்?

இத்­த­கைய காவிக் காடை­யர்கள் இவ்­வா­றெல்லாம் செய்­வ­தற்கு வச­தி­யாக இருப்­பது அவர்கள் இன்­னமும் ‘சிவுர’ காவியில் இருப்­ப­தாகும். நாட்­டிலும் சமூ­கத்­திலும் சிவு­ர­வுக்கு இருக்கும் மதிப்­பையும் அங்­கீ­கா­ரத்­தையும் இந்தக் காடை­யர்கள் துஷ்­பி­ர­யோகம் செய்து களங்­கப்­ப­டுத்­து­கின்­றனர். அவர்கள் காவி­த­ரித்துக் காட்­சி­ய­ளித்­தாலும் உண்­மை­யான புத்­தரின் சிவு­ரவை அவ­மா­னப்­ப­டுத்­துவோர் ஆவர். இத்­த­கைய கொடூ­ரத்­தன்­மை­களை, காடைத்­த­னங்­களை அழித்­தொ­ழிக்­கவே புத்தர் உபன்­யாசம் செய்தார். இத்­த­கைய துர்ச்­செ­யல்­களைக் களையவே புத்தரின் பின்னால் ஊரூராகச் சென்று உபன்யாசம் பண்ணும் சீடர்கள் அன்று காவி தரித்தனர். இன்று புத்த சாசனத்துக்குள்ளேயே காடையர்களும் சண்டியர்களும் புகுந்திருக்கும் இக்காலத்தில் புத்தசாசனத்திற்கு என்னதான் நடக்காதிருக்கும்?!

(பெளத்த பிக்குகளை – “சீவரதாரீன்” என்று பொதுவாகக் குறிப்பிடுவதில்லை. அவ்வாறு குறிப்பிடப்படும் ஒருசில பிக்குகளின் சில செயற்பாடுகள் புத்த தர்மத்துக்குப் பொருத்தமானவை அல்ல என்பதைச் சுட்டிக்காட்டும் நோக்கிலேயே சிங்களவர் மத்தியில் இப்பிரயோகம் உள்ளது. நாம் இந்தச் “சீவரதாரி – காவிதரித்திருப்போர்” எனும் பிரயோகத்தைத் தவிர்த்துக் கொள்வது சிறந்தது.)

2019.07.21 ‘அணித்தா’
இதழின் ஆசி­ரியர்
தலை­யங்கம்

தமிழில்: அஜாஸ் முஹம்மத்
vidivelli

Leave A Reply

Your email address will not be published.