முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

0 708

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் சிபா­ரிசு செய்­வ­தற்­காக நீதி­ய­மைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்ட குழு தயா­ரித்­துள்ள அறிக்­கைக்கு ஒன்­பது வரு­ட­கால நிறைவின் பின்பு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிபா­ரி­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளார்கள். நீதி­ய­மைச்சும், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் கூட்­டாக இணைந்து விரைவில் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினைச் சமர்ப்­பித்து முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை உள்­வாங்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளன.

இது­வரை காலம் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தின் கீழ் இயங்­கி­வரும் காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு இலங்­கையின் நீதிக்­கட்­ட­மைப்பில் மாற்றாந் தாய் மனப்­பான்­மையே காட்­டப்­பட்டு வந்­தது. காதி நீதி­மன்­றங்­கள் இது­வரை காலம் பாட­சா­லை­க­ளிலும் வீடு­க­ளிலும் பள்­ளி­வாசல் கட்­ட­டங்­க­ளி­லுமே இயங்­கி­வ­ரு­கின்­றன. ஒரு சில காதி நீதி­மன்­றங்­க­ளுக்கே குவைத் அர­சாங்­கத்தின் நிதி­யு­த­வியில் கட்­ட­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. காதி நீதி­ப­தி­க­ளுக்கு சிறிய தொகையே கொடுப்­ப­ன­வாக வழங்­கப்­பட்டு வரு­கி­றது. ஒருசிலர் இப் பதவியை துஷ்பிரயோகம் செய்கின்ற போதிலும் பெரும்பாலானோர் சமூக நலன் கருதி தங்­க­ளது கட­மை­களைச் செய்து வரு­கின்­றனர். அவர்கள் தொடர்பில் இது­வரை காலமும் அர­சாங்­கமோ முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ, உலமா சபையோ அக்­கறை செலுத்­த­வில்லை.

ஓய்­வு­நிலை உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு சமர்ப்­பித்த சிபா­ரி­சுகள் காதி நீதி­மன்றக் கட்­ட­மைப்பை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்கும் வகையில் அமைந்­தி­ருக்­கின்­றமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.
காதி நீதி­ப­திகள் தரமும் காதி நீதி­மன்றக் கட்­ட­மைப்பும் உயர்த்­தப்­ப­ட­வுள்­ளன. காதி நீதி­ப­தி­க­ளாக இஸ்­லா­மிய சட்டம் பயின்ற சட்­டத்­த­ர­ணிகள் நிய­மிக்­கப்­பட வுள்­ளார்கள். இதில் பெண்­களும் அடங்­க­வுள்­ளனர். அவர்கள் முழு நேர நீதித்­துறை அலு­வ­லர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்லை 18 ஆக அதி­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. பெண் ஒருவர் தலாக் கூறப்­படும் போதும், கண­வரின் வற்­பு­றுத்­த­லினால் பஸஹ் செய்து கொள்­ளும்­போதும் மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) பெற உரித்­து­டை­ய­வ­ரா­கும் வகையில் திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

பல­தார மணம் செய்து கொள்ள விண்­ணப்­பிப்­ப­வர்­க­ளுக்கு நிபந்­த­னை­க­ளு­ட­னேயே அனு­மதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. தாப­ரிப்பு வழக்­கு­களை விசா­ரிக்கும் அதி­காரம் மாவட்ட நீதி­மன்­றங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

மேற்படி விடயங்களில் முஸ்லிம் எம்.பி.க்கள் குழு இணக்கம் கண்டுள்ள போதிலும் தற்போது அதற்கெதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உலமா சபை இதனை எதிர்த்து வருகிறது. இந் நிலையில் இந்த திருத்தங்கள் மீண்டும் கிடப்பில் போடப்படலாம் எனும் அச்சம் தோற்றம் பெற்றுள்ளது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்களைச் சிபா­ரிசு செய்­வ­தற்கு ஒன்­பது வரு­ட­காலம் எடுத்துள்ளது. உண்மையில் அது மிக நீண்ட கால­மாகும். இவ்வாறான நீண்ட காலத்தை ஏற்கனவே செலவிட்டிருக்கையில் தற்போது மீண்டும் முரண்பட்டுக் கொள்வதும் திருத்தங்களைத் தாமதப்படுத்துவதும் ஆரோக்கியமானதல்ல. அத்துடன் இந்த முரண்பாடுகள் எம்.பி.க்கள் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் மத்தியில் பேசித் தீர்க்கப்பட வேண்டுமே தவிர அவை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படக் கூடாது. ஏற்கனவே இந்த விடயங்கள் மிம்பர் மேடைகளில் தாராளமாகப் பேசப்பட்டுள்ளன. பல உலமாக்கள் விடயம் விளங்காது இவற்றுக்குத் தவறான அர்த்தங்களைக் கற்பித்து மக்களை பிழையாக வழிநடாத்த முற்பட்டுள்ளார்கள். மீண்டும் மீண்டும் இந்தத் தவறு நிகழ அனுமதிக்க முடியாது. எனவேதான் இது விடயத்தில் தனியார் சட்ட திருத்த குழு மட்டத்திலேயே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் இன ரீதி­யான சட்­டங்கள் தேவை­யில்லை. ஒரு பொது­வான சட்­டமே தேவை என்னும் கருத்து தற்­போது வலுப்­பெற்று வரு­கி­றது. பதுளை மற்றும் அக்­கு­றணை காதி நீதி­மன்­றங்­க­ளுக்கு எதி­ராக எம்­ம­வர்­க­ளி­னாலே சவால்கள் வி­டப்­பட்­டுள்­ளன. பேரின ஊட­கங்கள் இதனைப் பெரி­துப­டுத்தி வரு­கின்­றன. இவ்­வா­றான சூழலில் எமது தனியார் சட்­டத்தை நாம் பாது­காத்துக் கொள்­வ­தற்குக் கட­மைப்­பட்­டி­ருக்­கிறோம். அவ­ச­ரப்­ப­டுத்த வேண்­டிய கட்­டத்தில் உள்ளோம். தொடர்ந்தும் நமக்குள் முரண்பட்டுக் கொள்வதானது இருக்கின்ற சட்டத்தையும் இல்லாதொழிக்கவே வழிவகுப்பதாக அமையும்.

எனவேதான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாமதியாது ஒன்று கூடி இறுதித் தீர்மானத்தை எட்ட வேண்டும். இதில் மேலும் மேலும் தாமதத்துக்கு இடமளிக்க முடியாது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.