முகம், தலையை மறைக்க வேண்டும் என்றால் மத்திய கிழக்குக்கு சென்றுவிடுங்கள்

அத்­து­ர­லிய ரதன தேரர்

0 888

‘இலங்­கை­யி­லுள்ள அனைத்துப் பாட­சா­லை­க­ளையும் கலவன் பாட­சா­லை­க­ளாக மாற்ற வேண்டும். இன ரீதி­யான பாட­சா­லைகள் இயங்கக் கூடாது. அனைத்து பாட­சாலை மாணவ, மாண­வி­களும் ஒரே சீருடை அணிய வேண்டும். முகத்­தையோ, தலை­யையோ மறைக்க முடி­யாது. அவ்­வாறு அவர்கள் மறைக்க வேண்­டு­மென்றால் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குப் போய் விடுங்கள்’ என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன தேரர் தெரி­வித்தார்.

அனு­ரா­த­பு­ரத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வர்த்­தக சமூ­கத்­தி­ன­ரு­ட­னான சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், நாட்டில் ஒரு தேசிய இனத்தை உரு­வாக்க வேண்­டு­மென்றால் உயர்தரத்தில் சித்­தி­ய­டையும் அனைத்து மாண­வர்­க­ளுக்கும் இரா­ணுவப் பயிற்சி வழங்­கப்­பட வேண்டும். அத்­தோடு அவர்­க­ளுக்கு நாட்டின் வர­லாறு போதிக்­க­ப்பட வேண்டும்.

டாக்டர் ஷாபி சிஹாப்தீன் சம்­பவம், சஹ்­ரானின் சம்­பவம் போன்­ற­தல்ல. சஹ்ரான் உட்­பட 8 தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் வந்­தார்கள். திடீ­ரென மக்­களைக் கொன்­றார்கள். டாக்டர் சாபி சிஹாப்தீன் சிங்­க­ள­வர்­களை நண்­பர்­க­ளாக்கிக் கொண்டு பெண்­க­ளுக்கு கர்ப்­பத்­தடை செய்தார். தற்­போது 900 பெண்கள் கருத்­த­டைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். நாங்கள் இல்­லா­விட்டால் டாக்டர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருப்பார். இவ­ருக்கு சவூ­தி­யி­லி­ருந்து நிதி கிடைத்­துள்­ளது. அவ­ரது வங்கி கணக்­குகள் முறை­யாக பரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அரபு மத்­ர­ஸாக்­களில் 30 ஆயிரம் மாண­வர்கள் வரையில் கல்வி கற்­கி­றார்கள். அவர்கள் 30 ஆயிரம் பேரே எதிர்­கா­லத்தில் அடிப்­ப­டை­வா­திகள். புத்தர் சிலை­களை உடைக்க வேண்டும். அல்லாஹ் மாத்­தி­ரமே வணங்­கப்­பட வேண்டும். புத்­தரை வணங்­கு­ப­வர்கள் மடை­யர்கள். அல்­லாஹ்வை வழி­ப­டா­த­வர்­களைக் கொலை செய்ய வேண்டும். அவ்­வாறு கொலை செய்தால் நாங்கள் சுவர்க்­கத்­துக்குச் செல்­லலாம் என்று அவர்கள் உறு­தி கொண்­டுள்­ளார்கள்.குண்­டுத்­தாக்­கு­தல்­தா­ரிகள் அல்ல பிரச்­சினை. ஹிஸ்­புல்லாஹ் பல்­க­லைக்­க­ழகம் என்று ஒன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கி­றது. கோடிக்­க­ணக்­கான சவூதி நிதி இதற்கு செல­வி­டப்­பட்­டுள்­ளது. ஹிஸ்­புல்­லாஹ்வை ஆளுநர் பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்கே நான் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மேற்­கொண்டேன். சஹ்­ரானை விட ஹிஸ்­புல்லாஹ் பயங்­க­ர­மா­னவர். சஹ்­ரானை விட டாக்டர் ஷாபி சிஹாப்தீன் பயங்­க­ர­மா­னவர்.

முஸ்­லிம்கள் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கைப்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள். நக­ரங்­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டுள்­ளார்கள். காணி­களைக் கைப்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள்.

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­க­ளுக்­காக அவர்­க­ளுக்கு சலு­கைகள் வழங்கப்படுகின்றன. சிங்களவர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு கைகோர்க்க வேண்டும்.
நாட்டில் ஒரே ஒரு தேசிய கல்வி கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு மாணவர்கள் இன, மத பேதங்களின்றி அக்கட்டமைப்புக்குள் இணைக்கப்பட வேண்டும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.