சவால்களை எதிர்கொள்வதில் சிக்கித் திணறும் முஸ்லிம் சமூகம்

0 1,205

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் சமூ­கத்­திற்குள் ஒளித்துக் கொண்­டி­ருந்த தீவி­ர­வா­த­மிக்க சிந்­த­னைக்கு ஆட்­பட்ட சிறு குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத தாக்­குதல் என்­பதை இலங்கை வாழ் மக்கள் அனை­வரும் அறிந்­து­வைத்­துள்ள விடயம். இத்­தாக்­கு­தலைத் தொடர்ந்து இடம்­பெற்று வரும் சவால்கள், நெருக்­க­டிகள் உட்­பட பல நகர்­வுகள் ஒட்­டு­மொத்த சமூ­கத்தின் நட­வ­டிக்­கை­களை முடக்கும் வகையில் அமைந்­தி­ருப்­பதை எவ­ராலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும்.

இந்­நாட்டில் இரண்­டா­வது சிறு­பான்­மை­யி­ன­மாக வாழும் முஸ்லிம் சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு எதிர்­கொள்ளும் நெருக்­க­டி­க­ளுக்கும் சவால்­க­ளுக்கும் முகங்­கொ­டுப்­பதில் திக்கித் திணறி நிற்­கின்­றது. இப்­பின்­ன­ணியில் முஸ்லிம் சமூ­கத்தின் இருப்பு, அர­சியல் பலம், கலா­சாரம், சமய பண்­பாட்டு அம்­சங்கள், சமூக நிலைப்­பா­டுகள் என்­ப­வற்றை முன்­னி­றுத்தி தலை­மைத்­து­வங்கள் சிந்­தித்து செய­லாற்ற வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிற்கு சமூகம் வந்­துள்­ளது.

இந்­நாட்டில் பல நூற்­றாண்டு வர­லாற்றைக் கொண்ட முஸ்­லிம்­களை வாழ முடி­யா­விட்டால் நாட்­டை­விட்டு வெளி­யே­று­மாறு பகி­ரங்­க­மாக கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்­டன. சமூ­கத்தின் வாழ்­வொ­ழுங்கு, மார்க்க அநுஷ்­டா­னங்கள், இருப்பு, உடை, கலா­சாரம், பண்­பா­டுகள், கல்வி, ஒழுக்க விழு­மி­யங்கள் என்று சகல விட­யங்கள் தொடர்­பா­கவும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. முஸ்­லிம்­களின் வர்­தத்­தக நிலை­யங்­களை பகிஷ்கரிக்­கு­மாறு கோரிக்­கைகள் எழுந்­துள்­ளன. இப்­ப­கிஷ்­க­ரிப்பு பல இடங்­களில் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன. சந்­தை­களில் முஸ்­லிம்கள் வியா­பாரம் செய்­வதை தடுத்து நிறுத்­தவும் முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. இதனால், முஸ்­லிம்­களின் வர்த்­த­கங்கள் நாளுக்கு நாள் சரி­வு­களைக் கண்டு வரு­கின்­றன.

இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் புரிந்­து­கொள்ளும் நன்­நோக்கில் வழங்­கப்­பட்ட புனித அல்­குர்­ஆனை முன்­னி­றுத்தி சமூ­கத்­தையும் மார்க்­கத்­தையும் குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏற்­று­வ­தற்கு கடும்­போக்கு சக்­திகள் முற்­பட்டு வரு­கின்­றன. இதில், அல்­குர்ஆன் அரு­ளப்­பட்ட காலப்­ப­கு­தி­யையும் பின்­ன­ணியையும் தெளி­வு­ப­டுத்­தாமல் அல்­குர்­ஆனை நேர­டி­யாக புரி­த­லுக்கு வழங்­கி­யதன் அவ­ச­ரத்­தன்மை மற்றும் நேர்­மைத்­தன்மை பற்றி சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

சமூகம் எதிர்­கொள்ளும் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் சமூகத் தலை­மை­களை பலப்­ப­டுத்­து­வதும் அத­னூ­டாக சமூகப் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வதும் அவ­சியம் என்­பதில் ஐய­மில்லை.

முஸ்லிம் சமூ­கத்­திற்குள், உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு அர­சியல் தலை­மை­களும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவும் ஆற்­றி­வரும் பங்­க­ளிப்­புக்­களைக் குறைத்து மதிப்­பி­டு­வ­தற்­கில்லை. இருப்­பினும், இத்­த­லை­மை­க­ளின்பால் சமூ­கத்­திற்குள் விமர்­ச­னங்­களும் இல்­லாமல் இல்லை.

இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் அன்று முதல் இரு தலை­மைகள் ஏற்றுக் கொள்­ளப்­பட்டு வந்­துள்­ளன. இதில் ஒன்று அர­சியல் தலை­மைகள் மற்­றை­யது மார்க்க தலை­மை­யாகும்.

முஸ்லிம் சமூகம் சிறு­பான்­மை­யாக வாழும் இலங்கை போன்ற நாடு­களில் சமூ­கத்தின் பாது­காப்புக் கவ­ச­மாக அர­சியல் பலம் காணப்­ப­டு­கின்­றது. சுதந்­தி­ரத்­திற்கு முன்­பி­ருந்தே முஸ்லிம் சமூகம் அர­சியல் பிர­தி­நி­தி­களை தமது தலை­மை­க­ளாக ஏற்றுக் கொண்டு பின்­பற்றி வந்­துள்­ளன. இன்றும், இத்­த­லை­மைத்­து­வங்­களின் மீது சமூகம் எது­வித குறை­க­ளு­மின்றி நம்­பிக்கை வைத்து செயற்­பட்டு வரு­கின்­றது. இதற்கு, சமாந்­தி­ர­மாக இயக்க வேறு­பா­டு­க­ளுக்கு அப்பால் முஸ்லிம் சமூகம், சமய தலை­மைத்­து­வங்கள் என்ற அடிப்­ப­டையில் உல­மாக்­களை தலை­மை­க­ளாக அங்­கீ­க­ரித்து வந்­துள்­ளது. மார்க்க ரீதி­யான தலை­மைத்­துவ வகி­பா­கத்தை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா நிறை­வேற்றி வரு­கின்­றது.

சமூ­கத்தின் ஒற்­றுமை தலை­மைத்­து­வத்தின் ஆளு­மைகள், தலை­மைத்­து­வத்தின் ஆற்­றல்கள் மற்றும் தனி­ம­னி­தர்­களின் தலை­மைத்­துவம் மீதான கட்­டுப்­பாடு என்­ப­வற்றில் தங்­கி­யுள்­ளது. எனவே சமூக ஒற்­று­மையில் தலை­மை­க­ளுக்கும் சமூ­கத்தில் வாழும் தனி­ம­னி­தர்­க­ளுக்கும் பங்­குண்டு.

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் ஆரம்ப காலங்­களில் தேசிய கட்­சி­களை சார்ந்து சலு­கை­களை பெற்­றுக்­கொள்ளும் அர­சி­ய­லாக இருந்து வந்­தது. எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் மர்ஹூம். எம்.எச்.எம். அஷ்ரப் முன்­னெ­டுத்த அர­சியல் விழிப்­பு­ணர்ச்­சியின் கார­ண­மாக குறிப்­பாக வட கிழக்கில் முஸ்­லிம்கள் தனித்­துவ அர­சி­யலில் நாட்டம் கொண்­டனர். இத்­த­னித்­துவ அர­சியல் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் பலத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­துடன் நின்று விடாது சமூக உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கும் அபி­வி­ருத்­தி­களைப் பெற்றுக் கொள்­ளவும் கார­ண­மாக அமைந்­தது.

முஸ்­லிம்­களின் அர­சியல் போக்கு தற்­போது தனித்­துவ அர­சியல் மற்றும் தேசிய கட்­சி­கள்சார் அர­சி­ய­லாகக் காணப்­ப­டுன்­றது. இப்­பின்­ன­ணியில், இன்று இன­வாத பொறிக்குள் தள்­ளப்­பட்­டுள்ள முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­மை­களின் மீது பாரிய பொறுப்பு சுமத்­தப்­பட்­டுள்­ளது. இது­காலம் வரை, கட்சி ரீதி­யான அர­சி­யலில் நாட்டம் கொண்ட முஸ்­லிம்கள் தற்­போது கட்­சி­க­ளுக்கு அப்பால் நின்று சமூகம் எதிர்­கொள்ளும் சவால்கள், நெருக்­க­டிகள் பற்றி சிந்­தித்து வரு­கின்­றனர்.

இச்­சிந்­த­னையின் வெளிப்­பாடு அர­சியல் தலை­மை­க­ளையும் விட்­டு­வைக்­க­வில்லை என்­ப­தற்கு ஓர் எடுத்­துக்­காட்டு முஸ்லிம் அமைச்­சர்கள் ஒன்­று­பட்டு அமைச்சுப் பத­வி­களை இராஜி­னாமா செய்­தமை என்­பதில் கருத்து முரண்­பா­டு­க­ளில்லை. முஸ்லிம் சமூகம் கடும்­போக்கு சக்­தி­களால் அடைந்­து­வரும் நெருக்­க­டிகள் முடி­வ­டையும் வரை தீவிர கட்சி அர­சி­யலில் பெரிதும் நாட்டம் கொள்­வர்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

அர­சியல் தலை­மைகள் சமூ­கத்தின் துயரைத் துடைத்து இன­வாதப் பொறி­யி­லி­ருந்து சமூ­கத்தை காப்­பாற்ற வேண்­டு­மென்ற எதிர்­பார்ப்பு முழு முஸ்லிம் சமூ­கத்­தி­டமும் வலு­வ­டைந்­துள்­ளது. முஸ்லிம் சமூ­க­மா­னது பத­வி­களை இராஜி­னாமா செய்த அமைச்­சர்கள் மீண்டும் பத­வி­களை பொறுப்­பேற்­பதால் மட்டும் மகிழ்ச்­சி­ய­டையப் போவ­தில்லை.

முஸ்­லிம்­களை சந்­தே­கத்­துடன் பிற­ச­மூ­கங்கள் பார்க்கும் நிலை மாற்­ற­ம­டைய வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இன­வாத, வெறுப்பு பிர­சா­ரங்கள் தொடர இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இதற்கு முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் பாடு­பட வேண்டும் என்­ப­தில்தான் அக்­கறை கொண்­டுள்­ளது. இப்­பொ­றுப்பை அர­சியல் தலை­மைகள் அமைச்சுப் பத­வி­களை ஏற்­பதன் மூலம் அல்­லது ஏற்­காமல் நிறை­வேற்ற வேண்டும் என்­பதே சமூ­கத்தின் எதிர்­பார்ப்­பாகும். இந்­நெ­ருக்­கடி நிலைமை முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் வர­லாற்றில் முதற் தட­வை­யாக ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­மிக்க நிலை­யாகும்.

முஸ்லிம் சமூ­கத்தை வழி­ந­டாத்தும் மற்­று­மொரு தலை­மைத்­து­வ­மாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா இருந்து வரு­கின்­றது. இச்­சபை முழுக்க முழுக்க உல­மாக்­களைக் கொண்ட சபை­யாகும். கொள்கை ரீதி­யா­கவும் இயக்க ரீதி­யிலும் பிள­வு­பட்ட முஸ்லிம் சமூ­கத்­திற்குள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட சபை­யாக இது இருந்து வரு­வதில் மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும்.

உலமா சபையின் கடந்­த­கால செயற்­பா­டுகள் தொடர்­பாக சமூ­கத்­திற்குள் விமர்­ச­னங்கள் ஏராளம். இதற்கு மத்­தியில், உலமா சபை தற்­போது பகி­ரங்க தளங்­களில் கடும் விமர்­ச­னத்­திற்­குட்­படத் தொடங்­கி­யுள்­ளது.

இன்று கடும்­போக்­கா­ளர்­களால் இலக்கு வைக்­கப்­படும் இஸ்­லா­மிய நிறு­வ­னங்­களில் முதன்மை நிறு­வ­ன­மாக உலமா சபை காணப்­ப­டு­கின்­றது. இவ்­வி­மர்­ச­னங்­களால் சில வேளை­களில் பெரும்­பான்மை சமூ­கத்­திற்குள் உலமா சபை மீதான பிழை­யான பார்வை வலு­வ­டை­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம். பெரும்­பான்மை சமூகம் பொதுத்­த­ளத்தில் உலமா சபையை புறக்­க­ணிக்கும் நிலை­கூட ஏற்­ப­டலாம். அப்­ப­டி­யொரு நிலைமை ஏற்­ப­டு­வது அபா­ய­க­ர­மா­ன­தாகும். எனவே, இப்­ப­கி­ரங்க விமர்­ச­னங்­களின் பரி­ணாமம் சமூ­கத்­திற்­குள்ளும் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­வி­டாமல் பார்த்­துக்­கொள்ள வேண்­டிய தலை­யாய கடமை உலமா சபையின் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளது. \

இந்­நாட்டில் இஸ்லாம் தொடர்­பா­கவும் முஸ்­லிம்­களின் வாழ்­வொ­ழுங்கு தொடர்­பா­கவும் எழுப்­பப்­படும் சந்­தே­கங்­க­ளுக்கு தெளி­வு­களை வழங்கும் ஆற்­றலை உலமா சபை உள்­வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த காலங்­களில் ஏற்­பட்ட பிறைப் பிரச்­சி­னைகள் போல் இன்­றைய நெருக்­க­டி­களைக் கரு­தி­விட முடி­யாது.

இன்று, முஸ்லிம் தனியார் சட்டம், மக்தப், மத்­ர­ஸாக்கள், காதி நீதி­மன்றம் முத­லா­னவை தொடர்­பாக பிழை­யான அர்த்­தங்கள் கற்­பிக்­கப்­ப­டு­வ­துடன் கேள்­வி­களும் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. இதற்கான தெளிவுகளை முன்வைப்பது அவசியம். கடந்த காலங்களில் ஏற்பட்ட ஹலால் விவகாரம் மற்றும் அதுசார் விளைவுகள் பற்றி மீள் சிந்தனைக்குட்படுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.

எதிர்வரும் வருடங்கள் நிச்சயம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு சவால்மிக்கதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இச்சவால்களை எதிர்கொள்வதற்குரிய பொறி முறைகளை முன்னெடுக்கத்தக்கதாக துறைசார் புத்திஜீவிகளின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளத்தக்க கட்டமைப்பு மாற்றங்களை கொண்டதாக மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
அரசியல் தலைமைகளும் மார்க்கத் தலைமைகளும் சிந்தித்து சமூகத்தின் தலைமைத்துவத்தை முன்னெடுத்து நல்லிணக்கத்துடனான ஐக்கியத்தை கட்டியெழுப்ப உழைப்பது அவசியம்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.