மாற்றங்களை வேண்டி நிற்கும் ஜம்இய்யதுல் உலமா சபை

0 948

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் மத்­தி­ய­சபை பொதுக் கூட்டம் எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­க­ிழமை நடை­பெ­ற­வுள்­ள­தாக அறி­ய­மு­டி­கி­றது. இக்­கூட்­டத்தில் 25 மாவட்­டங்­களைச் சேர்ந்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை கிளை­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். மத்­திய சபைக் கூட்­டத்தின் இரண்­டா­வது அமர்வில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் எதிர்­வரும் மூன்று வரு­டங்­க­ளுக்­கான நிர்­வா­கிகள் தெரிவு இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை இலங்கை நாட்டில் முஸ்­லிம்­களின் சன்­மார்க்கத் தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்­காக கடந்த 1924 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட ஓர் உயர்ந்த சிவில் அமைப்­பாகும். 2000 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க சட்­டத்தின் பிர­காரம் இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் பாரா­ளு­மன்­றத்தில் ஜம்­இய்யா கூட்­டி­ணைக்­கப்­பட்­டுள்­ளது. நாட­ளா­விய ரீதியில் மாவட்ட, பிர­தேசக் கிளைகள் என 145 கிளைகள் உள்­ளன. 5500 க்கும் மேற்­பட்ட ஆலிம்கள் தற்­போது ஜம்­இய்­யாவில் அங்கம் வகிக்­கின்­றனர்.

ஜம்­இய்­யதுல் உல­மாவின் கீழ் இயங்கும் கல்­விப்­பி­ரிவு, சமூக சேவைப் பிரிவு மற்றும் பத்வா பிரிவு போன்ற பல்­வே­று­பட்ட உப பிரி­வுகள் மூலம் முஸ்லிம் சமூகம் எண்­ணி­ல­டங்­காத நன்­மை­களை அனு­ப­வித்­துள்­ளது. ஜம்­இய்­யாவின் தேசிய அள­வி­லான சமூக வேலைத்­திட்­டங்கள் மூலம் இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் உட்­பட முஸ்­லி­மல்­லா­த­வர்­களும் பய­ன­டைந்து வந்­தி­ருக்­கி­றார்கள். குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் ஐக்­கி­யத்­தையும் முஸ்லிம் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளுக்கு மத்­தியில் சக­வாழ்­வையும் கட்­டி­யெ­ழுப்பும் முயற்­சியில் ஜம்­இய்யா ஈடு­பட்டு வரு­கின்­றது.

மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான கடந்த அர­சாங்­கத்­திற்­கெ­தி­ராக மனித உரிமை மீறல், போர்க்­குற்றம் தொடர்­பான சர்­வ­தேச விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது நாட்டின் சிறு­பான்மை சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஜெனிவா வரை சென்று நாட்டின் அர­சாங்­கத்­துக்கு சார்­பாக பேசு­வது முதற்­கொண்டு இலங்­கையில் செயற்­படும் இஸ்­லா­மிய இயக்­கங்­க­ளையும் ஜமா­அத்­க­ளையும் ஒரே குடையின் கீழ் இணைத்து அவர்­களை வழி­ந­டாத்­து­கின்ற பொறுப்பை ஜம்­இய்யா தன்­ன­கத்தே கொண்­டுள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை இலங்கை முஸ்­லிம்­களை சன்­மார்க்க ரீதி­யா­கவும் சமூக ரீதி­யா­கவும் சில இக்­கட்­டான நிலை­களில் அர­சியல் ரீதி­யா­கவும் வழி­ந­டத்தி வந்­துள்­ளது. நாட்டில் அவ்­வப்­போது ஏற்­படும் அனர்த்தம் மற்றும் அசா­தா­ரண சூழ்­நி­லை­க­ளின்­போது முஸ்லிம், முஸ்­லி­மல்­லா­தவர் என்று பாராது களத்தில் நின்று தன்­னா­லான நிவா­ரணம் மற்றும் மீள் கட்­ட­மைப்பு பணி­களை மேற்­கொண்டு வந்­துள்­ளது. அந்­த­வ­கையில் 2005 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்தின் போது ஜம்­இய்யா மேற்­கொண்ட நிவா­ரணப் பணிகள் மெச்­சத்­தக்­கவை.

ஜம்­இய்­யதுல் உலமா சபை தனக்கு கீழி­யங்கும் உப­பி­ரி­வு­களில் ஒன்­றான கல்விப் பிரிவின் மூல­மாக தலை­நகர் மற்றும் ஏனைய பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் கல்விப் பிரச்­சி­னைகள் குறித்து கவனம் செலுத்தி வந்­துள்­ள­தோடு அதற்­கான நடை­முறைத் தீர்­வு­க­ளையும் உரிய தரப்­புக்­க­ளோடு இணைந்து பெற்றுக் கொடுத்­துள்­ளது. தவிர மாணவ மாண­வி­க­ளுக்­கான புலமைப் பரி­சில்­க­ளையும் வழங்கி வரு­கி­றது.

குறிப்­பாக, இலங்கை ஈஸ்­டர்­தின குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் பேரி­ன­வாத சக்­தி­களால் இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­கொண்­டு­வரும் சமய, சமூக, பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது அதற்­கு­ரிய தீர்­வு­களைப் பெற்றுத் தரு­வதில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளு­டனும் பிற­மத அர­சியல் தலை­வர்­க­ளு­டனும் கூட்­டி­ணைந்து இனங்­க­ளுக்­கி­டை­யி­லான கொதி­நி­லையை கட்­டுப்­ப­டுத்­து­வதில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா காத்­தி­ர­மான பணி­களை மேற்­கொண்டு வந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

புதிய நிர்­வாகத் தெரிவை எதிர்­நோக்­கி­யுள்ள ஜம்­இய்­யதுல் உல­மாவின் அடுத்த நிர்­வா­கத்­திற்­கான தலைமை தேர்வு குறித்து பல்­வே­று­பட்ட கருத்­தா­டல்கள் முகநூல் போன்ற சமூக வலைத்­த­ளத்தில் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க கூடி­ய­தாக உள்­ளது. தற்­போது ஜம்­இ­யாவின் தலை­வ­ராக பதவி வகிக்கும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அதன் தலைமைப் பொறுப்பை கடந்த 16 ஆண்­டு­க­ளாக பொறுப்­பெ­டுத்து செய்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இஸ்­லா­மிய அறிவுப் பின்­பு­லமும் உல­க­ளா­விய முஸ்லிம் உம்மத் பற்­றிய தெளிவும் தேசிய முஸ்­லிம்கள் பற்­றிய புரி­த­லை­யையும் கொண்ட அஷ்ஷெய்க் றிஸ்வி முப்­தியே எதிர்­வரும் புதிய நிர்­வாக தெரி­விலும் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்து அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் ஒரு சிலரால் முக­நூலில் முன்­வைக்­கப்­ப­டு­வதை காணலாம். அதே­போன்று தற்­போது ஜம்­இய்­யாவின் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கக்­கூ­டிய யூசுப் முப்தி, அப்துல் ஹாலிக் மெள­லவி மற்றும் அகார் முஹம்மத் நளீமி போன்­ற­வர்­களை மையப்­ப­டுத்தி இவர்­களில் ஒருவர் புதிய நிர்­வாகத் தலை­வ­ராக தேர்வு செய்­யப்­பட வேண்டும் என்­கின்ற கருத்­தா­டல்கள் ஆங்­காங்கே இடம்­பெற்று வரு­வ­தையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

இலங்கை முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஓர் உயர் சிவில் அமைப்பு என்ற வகையில் புதிய நிர்­வாகத் தெரிவை எதிர்­நோக்­கி­யுள்ள ஜம்­இய்­யதுல் உலமா சபை அதன் நிர்­வாகக் கட்­ட­மைப்பில் சில திருத்­தங்­க­ளையும் மாற்­றங்­க­ளையும் மேற்­கொள்ள வேண்­டு­மென்று முஸ்லிம் சமூகம் சார்பில் பெரிதும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஓர் உயர் சிவில் அமைப்பு என்ற வகையில் ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைப் பொறுப்­பா­னது ஒரே நப­ரிடம் பல ஆண்­டு­க­ளாக இருந்து வரு­வது அதன் கட்­ட­மைப்­புக்குள் ஒரு­வரின் அதி­கா­ரமே மேலும் தலை­தூக்­கு­வ­தற்கும் நிர்­வாக கட்­ட­மைப்பில் தொய்­வான நிலை உருப்­பெ­று­வ­தற்கும் வழி ஏற்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. அதே­போன்று புதிய மாற்­றங்­களும் சிந்­த­னை­களும் ஏற்­பட தடைக்­கல்­லாக அமை­வ­தோடு புதிய வேலைத்­திட்­டங்­க­ளுக்கு முட்­டுக்­கட்­டை­யாக அமை­வ­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­ப­டு­கி­றது.

ஆகவே, இம்­மு­றையும் வழ­மை­போன்று ஜம்­இய்­யாவின் தலைமைப் பொறுப்பு அதன் முன்­னைய தலை­மையே ஏற்­காமல் புதி­ய­தொரு தலை­மைக்கு அந்தப் பதவி வழங்கப்­பட வேண்டும் என்­பது அநே­க­மா­ன­வர்­களின் அவா­வாக உள்­ளது. ஜம்­இய்­யதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் கல்வி, சமூக மற்றும் அர­சியல் உள்­ளிட்ட முக்­கிய உப­பி­ரி­வு­களில் உல­மாக்கள் தவிர்ந்த ஏனைய துறை­சார்ந்த அறி­ஞர்கள் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்கை சமூகம் சார்பில் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

அந்த வகையில் தீவ­ளா­விய ரீதி­யி­லி­ருந்து முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஆளு­மை­மிக்க கல்­வி­ய­லா­ளர்கள், சட்­டத்­த­ர­ணிகள், வைத்­தி­யர்கள், பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள் உள்­ளிட்ட துறை­சார்ந்த நிபு­ணர்கள் இதற்­காக ஆவன செய்­யப்­ப­டு­வ­தோடு குறித்த துறை­சார்ந்த நிபு­ணர்­களின் அறி­வியல் பங்­க­ளிப்பு மூலம் தனது செயற்­றிட்­டங்­களை மென்­மேலும் வினைத்­தி­றன்­மிக்­க­தாக ஆக்கிக் கொண்டு சமூ­கத்தை வழி­ந­டாத்­து­கின்ற பொறுப்பை ஜம்­இய்யா ஏற்று நடத்த வேண்­டு­மென்ற கோரிக்கை இருந்து வரு­கி­றது.

‘தனி­மரம் தோப்­பா­காது’ என்ற முது­மொ­ழிக்­கேற்ப ஜம்­இய்­யதுல் உலமா சபை இலங்கை முஸ்லிம் சமூ­கத்தை தேசிய ரீதி­யாக பிர­தி­நி­தித்­துவம் செய்யும் தன்னால் சுமக்க முடி­யாத சுமையை சுமந்­துள்ள நிலையில் இத்­த­கைய துறைசார் நிபு­ணர்­களின் உள்­ளீர்ப்­பா­னது உலமா சபையின் பணி­களை மென்­மேலும் செயல்­திறன் மிக்­க­தாக மாற்றி அமைக்க பங்­க­ளிப்பு நல்கும் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை.

ஜம்­இய்­யதுல் உல­மாவை பொறுத்­த­மட்டில் அதன் நிர்­வாக மற்றும் அதன் கீழி­யங்கும் உப­பி­ரிவுக் கட்­ட­மைப்­பா­னது குறித்த ஓர் இயக்­கத்தை மாத்­திரம் சேர்ந்த உல­மாக்­களின் அதி­கார எல்­லைக்குள் செயற்­ப­டு­வ­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது. இதனால் சில வேளை­களில் தேசி­ய­ரீ­தியில் முஸ்­லிம்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் ஜம்­இய்­யதுல் உல­மாவின் பொறுப்­புக்கு சவா­லாக அமையும் சந்­தர்ப்­பங்கள் உண்டு. இதற்கு கடந்த காலங்­களில் சில கசப்­பான உதா­ர­ணங்­களும் உண்டு. ஆகவே இது குறித்து ஜம்­இய்யா முற்­போக்­காக செய­லாற்­ற­வேண்­டிய அவ­சியம் உள்­ளது.

இஸ்­லா­மிய சட்­ட­வியல் துறையைப் பொறுத்­த­மட்டில் இஸ்­லா­மிய மரபில் நான்கு மிக முக்­கிய இமாம்­களின் சிந்­தனைப் பள்­ளிகள் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றன. அந்த வகையில் ஜம்­இய்­யதுல் உலமா ஒரு முகாந்­தி­ரத்தில் மாத்­திரம் சுருங்கி கொண்டு தனது சமய வழி­காட்­டல்­களை வழங்­கு­வ­தா­னது ஜம்­இய்யா ஏற்­றி­ருக்கும் தேசிய பாத்­தி­ரத்­திற்கு ஒரு சவா­லாக மாறி­வி­டு­வது தவிர்க்க முடி­யாமல் போய்­வி­டு­கி­றது. அந்­த­வ­கையில் ஜம்­இய்யா இத்­துறை சார்ந்த தனது ஒற்றை நிலைப்­பாடு குறித்து மீள்­வா­சிப்பு செய்ய வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது. ஒரு நிறு­வ­ன­ரீ­தி­யான செயற்­பாட்டின் போது அதன் சீரான கட்­ட­மைப்­புக்கு நிதி மூல­தன செயற்­பா­டா­னது இன்­றி­ய­மை­யா­த­தாகும். அந்த வகையில் ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் நிதி மூல செயற்­பா­டுகள் தொடர்பில் வெளிப்­ப­டைத்­தன்மை பேணப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். ஜம்­இய்­யதுல் உல­மாவின் வரு­மான செலவு விப­ரங்கள் தொடர்பில் வெளிப்­படைத் தன்மை வாய்ந்த அறிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­வது கட்­டா­ய­மாகும். அதன் மூலம் பொது­மக்கள் ஜம்­இய்­யாவின் நிதி நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்கு ஆவன செய்­யப்­பட வேண்டும். கடந்த காலங்­களில் ஜம்­இய்­யதுல் உலமா சபையின் நிதி செயற்­பா­டுகள் தொடர்பில் சில கேள்­விகள் எழுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக ஹலால் சான்­றிதழ் வழங்கும் ஜம்­இய்­யாவின் நட­வ­டிக்­கைகள் மூல­மாக பெறப்­பட்ட நிதி வரு­மா­னங்கள் தொடர்பில் பெரும்­பான்மை சமூ­கத்­துக்கு மத்­தியில் பல்­வே­று­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனவே இது குறித்து ஜம்­இய்­யதுல் உலமா ஆராய வேண்டும்.

இலங்கை ஈஸ்டர் தின தற்­கொலை குண்டுத் தாக்­குதல் சம்­ப­வத்­திற்குப் பிறகு புதி­ய­தொரு முகத்­தோடு இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக விஸ்­வ­ரூபம் எடுத்­தி­ருக்கும் சிங்­களப் பேரி­ன­வா­தத்தின் பார்வை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் பால் திரும்­பி­யுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அதே­போன்று ஜம்­இய்­யதுல் உலமா சபை மீது அடிப்­ப­டை­வாத முத்­திரை குத்­தப்­ப­டு­கி­றது. அதனை பகிஷ்­க­ரிக்­கு­மாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக, உலமா சபையின் தற்­போ­தைய தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மீது பல்­வே­று­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக உள்ளது.

இலங்கையில் செயற்பட்டுவரும் ஸூபி, தரீக்கா முகாம்களை பொறுத்தமட்டில் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையின் கீழல்லாது சுயேச்சையாக செயற்பட்டுவருகின்றன. அந்தவகையில் இலங்கையில் இயங்கிவரும் சூபி, தரீக்காவாதிகளை இந்நாட்டின் மிதவாத சம்பிரதாய முஸ்லிம்களாகக் கருதும் சிங்களப் பேரினவாத சக்திகள் அவர்களல்லாத ஏனைய முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாகவும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவும் குற்றம் சாட்டுகிறது.

இதற்குப் பின்னால் இயக்க ஜமாஅத் சார்ந்த காட்டிக் கொடுப்புகள் இருப்பதாக அறிய முடிகிறது. அண்மையில் சிங்கள பெளத்த அமைப்பொன்றின் மூலம் கண்டியில் ஒழுங்கு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான மாநாடொன்றில் இதுகுறித்து பகிரங்கமாகவே அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சம்பிரதாய முஸ்லிம்களும் எம்மைப் போன்றவர்களே. நாங்கள் சிலைகளை வணங்குகிறோம் அவர்கள் அவர்களின் பெரியார்களது அடக்கஸ்தலங்களை வணங்குகிறார்கள் என்றடிப்படையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜம்இய்யத்துல் உலமாவின் நிர்வாக கட்டமைப்பை இயக்க ஜமாஅத் வேறுபாடுகளுக்கப்பால் பலப்படுத்தவேண்டிய தேவை வெகுவாக உணரப்பட்டுள்ளது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.