ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்

0 710

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பு ஜனா­தி­ப­தியின் சில உறு­தி­மொ­ழி­க­ளுடன் நிறைவு பெற்­றி­ருக்­கி­றது. இச்­சந்­திப்பு திங்­கட்­கி­ழமை இரவு ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

ஜனா­தி­ப­தியைச் சந்­தித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அமுல்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­ப­டாத நூற்­றுக்­க­ணக்­கான அப்­பாவி முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மைக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டார்கள். முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் சம­கால சவால்கள் மற்றும் நெருக்­க­டிகள் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு விளக்கிக் கூறிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நிர­ப­ரா­தி­களை உட­ன­டி­யாக விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் கோரிக்கை விடுத்­தார்கள்.

அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் கண்­டியில் பொது பல­சேனா ஏற்­பாடு செய்­தி­ருந்த மாநாட்டில் ஞானசார தேரர் ஆற்­றிய உரை முஸ்லிம் சமூ­கத்தை நிந்­தித்­துள்­ளது. அரபு எழுத்­துக்கள், குர்ஆன் பிர­தி­களை தம்­வசம் வைத்­தி­ருந்த அப்­பாவி முஸ்­லிம்கள் இந்த அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழேயே கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இச் சட்­டத்தின் கீழ் நாட்­டி­லுள்ள அனைத்து முஸ்­லிம்­களும் இலக்கு வைக்­கப்­ப­டு­வ­தா­கவும் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தா­கவும் அவர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்­து­ரைத்­தார்கள்.
மேலும் உலமா சபை மிகவும் மோச­மாக விமர்­சிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பயங்­க­ர­வா­தத்­துடன் உலமா சபை தொடர்­புள்­ள­தா­க ஞான­சார தேரர் குற்றம் சுமத்­தி­யுள்­ள­துடன் அவர்­களை நிந்­த­னையும் செய்­துள்ளார் என்றும் ஜனா­தி­ப­தியை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார்கள்.

“நீங்­களே பொது மன்­னிப்பின் கீழ் ஞான­சார தேரரை விடு­தலை செய்­தீர்கள். அதனால் இது விட­யத்தில் நீங்­களே தலை­யிட்டு இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும்.” எனவும் அவர்கள் ஜனா­தி­ப­தியை வேண்­டி­யுள்­ளார்கள்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறைச்­சாலை நிகழ்­வொன்றில் கலந்து கொண்­ட­போது சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வந்த ஞான­சார தேர­ருடன் மேற்­கொண்ட கலந்­து­ரை­யா­ட­லினை அடுத்தே அவ­ருக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. ‘இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை நாட்­டி­லி­ருந்து இல்­லாது ஒழிக்க முடியும்’ என தான் ஜனா­தி­ப­தி­யிடம் அன்று கூறி­ய­தாக ஞான­சார தேரர் சிறை­யி­லி­ருந்து வெளி­வந்த பின்பு பல தட­வைகள் தெரி­வித்­தி­ருந்தார். அதனை இப்­போது அவர் அரங்­கேற்ற முயற்­சிப்­ப­தா­கவே தெரி­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் பல உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யுள்ளார். அவ­ச­ர­கால சட்டம் இனி நீடிக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் கூறி­யுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திக­தியே ஒரு மாத காலம் அவ­ச­ர­கால சட்­டத்தை நீடிப்­ப­தற்­கான விசேட அர­சாங்க வர்த்­த­மா­னியில் ஜனா­தி­பதி கையொப்­ப­மிட்டார். அவ்­வா­றெனில் அவ­ச­ர­காலச் சட்டம் எதிர்­வரும் 22 ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வர­வேண்டும்.

பிர­ச­வத்­துக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரிக்­காத வகையில் கர்ப்­பத்­தடை சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்டார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு இலக்­கா­கி­யி­ருந்த டாக்டர் ஷாபி குற்­ற­மற்­றவர் என்று அவர் தொடர்­பான விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளதால் அவரை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என்றும் ஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அத்­தோடு பயங்­க­ர­வாத சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் வைத்­தி­யர்கள், பொறி­யி­ய­லா­ளர்கள், மௌல­வி­மார்கள் உட்­பட 36 பேரை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் கூறி­யுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர், சட்­டமா அதிபர், இரா­ணு­வத்­த­ள­பதி ஆகி­யோ­ருடன் பேசி விடு­தலை தொடர்பில் உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தான் கூறி­ய­தாகத் தெரி­வித்து நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­த­பா­விடம் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் உறு­தி­மொ­ழிகள், பணி­ப்பு­ரைகள் முஸ்லிம் சமூ­கத்­துக்கு ஆறு­தலைத் தரு­கின்­றன. என்­றாலும் ஜனா­தி­ப­தியின் உறு­தி­மொ­ழிகள், பணிப்­பு­ரைகள் எப்­போது அமு­லாக்­கத்­துக்கு வரப்­போ­கி­றது என்­பதை நாம் பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்டும்.

ஜனாதிபதியின் உறுதிமொழிகள், பணிப்புரைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம்.பௌசி, பைசர் முஸ்தபா ஆகியோரே ஜனாதிபதியைச் சந்தித்திருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி ஒன்றுபட வேண்டியதும் அவசியமாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.