புத்தரைக் கல்லெறிந்து கொல்லும் அஸ்கிரிய புத்த மதம்!

0 952

இலங்­கையின் அரச பாது­காப்புப் பிரி­வினால் யாழ். பொது­நூ­லகம் தீவைத்துக் கொளுத்­தப்­பட்ட பேர­திர்ச்­சியை இலங்­கையின் புகழ்­பெற்ற ஒரு கவி­ஞ­ரான பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஒரு கவி­தை­யாக வடித்­தி­ருந்தார். அக் கவி­தையின் தலைப்பு ‘புத்­தனைக் கொல்­லுதல்’. ஒருவர் கண்ட கன­வாக அக்­க­விதை புனை­யப்­பட்­டி­ருந்­தது. அக்­க­வி­தையில், பொலி­ஸா­ரினால் சுட்டுக் கொல்­லப்­பட்ட புத்­தரின் உடலம், எரிந்து சாம்­ப­லாகிக் கிடந்த யாழ் பொது­நூ­ல­கத்தின் படி­வ­ரி­சை­களில் அனா­தை­யாகக் கிடக்­கி­றது. அதைக் கண்­ணுற்ற அர­சாங்­கத்தின் அமைச்சர் ஒருவர் ‘நமது கொலைப் பட்­டி­யலில் இவ­ரது பெயர் இல்­லையே.. ஏன் இவரைக் கொன்­றீர்கள் ?’ எனக் கோபத்­துடன் கேட்­கிறார். அப்­போது புத்­தரைக் கொன்­றொ­ழித்த அதி­கா­ரி­களில் ஒருவர் தன் செய­லுக்­கான நியா­ய­மாக ‘இவரைக் கொல்­லாமல் நாம் ஓர் ஈயெ­றும்­பைக்­கூடக் கொல்ல முடி­யாது என்­ப­தா­லேயே இவரைக் கொல்ல நேர்ந்­தது’ என்­கிறார்.

புத்­தரின் தர்­மத்தில் தடுக்­கப்­பட்­டுள்ள முத­லா­வது கடு­மை­யான விடயம் கொலை செய்­த­லாகும். இல்­ல­றத்தில் இருப்­போ­ருக்­காக புத்தர் அரு­ளி­யுள்ள பஞ்­ச­சீ­லத்தில் முத­லா­வ­தாகக் கொலை­செய்­வது தடுக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்குப் பிர­தா­ன­மான ஒரு காரணம் இருக்­கி­றது. கள்­ளுண்­ணா­மையை முத­லா­வ­தா­கவும் கொல்­லா­மையை ஐந்­தா­வ­தா­கவும் வரி­சைப்­ப­டுத்தி புத்தர் போதிக்­கா­தது ஏன்? அவ­ரது மொத்த தர்­மத்­தி­னதும் மூல சாரமே அகிம்சை என்­ப­தால்தான் அவ்­வாறு உயிர்க்­கொ­லையை முத­லா­வது பாரிய குற்­ற­மாக புத்தர் கரு­தி­யி­ருந்தார். ஒருவர் இன்­னொ­ருவர் மீது மன­தாலும் வார்த்­தை­யாலும் இம்­சிக்கத் தொடங்­கினால் அதன் முடிவு உயிர்க் கொலை­யில்தான் முடி­வு­று­கி­றது. அத­னால்தான் அன்­பு­செ­லுத்­துதல் மற்றும் அகிம்­சையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட புத்த தர்­மத்தில் முதன்மை தர்­ம­மாகக் கொல்­லாமை இடம்­பி­டித்­துள்­ளது.

புத்தர் பரி­நிர்­வா­ண­ம­டைந்த தினத்­தன்றே பிக்கு ஒருவர் மிகுந்த மகிழ்ச்­சியில் இருந்தார். ஏனைய பிக்­குகள் புத்­தரின் இறப்­பினால் கவ­லையில் மூழ்­கி­யி­ருந்­த­போது அவர்­களை ஆசு­வா­சப்­ப­டுத்த நினைத்தார் மகிழ்ச்­சி­யாக இருந்த அந்த பிக்கு. ‘இனி நமக்கு சட்ட திட்­டங்கள் போட எவ­ரு­மில்லை, நாம் இனி சுதந்­தி­ர­மாக இருக்­கலாம்’ என்று அவர்­க­ளுக்குச் சொன்னார். எம்.ஏ. நுஃமான் அவர்­களின் கவி­தையில் சொல்­லப்­ப­டு­வதும் இது­போன்ற ஒரு செய்­திதான்.
அந்த யாழ். பொது­நூ­ல­கத்தைத் தீவைத்துக் கொளுத்­தி­ய­வர்கள், கொலை­களை செய்­வ­தெனும் தமது கட­மையைத் தொடர்ந்து செய்­து­கொண்டு போவ­தற்கு முத­லா­வ­தாக அவர்கள் புத்­த­ரைத்தான் கொல்ல வேண்­டி­யி­ருந்­தது !
அஸ்­கி­ரிய பீடத்தின் வரக்­கா­கொட ஸ்ரீ ஞான­ர­தன மகா­நா­யக்க தேரர் கடந்த வாரம் அற்­பு­த­மா­னதோர் ‘உபன்­யாசம்’ செய்­துள்ளார்.

“முஸ்­லிம்கள் எங்­க­ளோடு நேச­மாக இல்லை… அதனால் நீங்கள் அவர்­க­ளது கடை­க­ளுக்குச் செல்ல வேண்டாம், அவர்­க­ளது கடை­களில் உண்­ணவோ பரு­கவோ வேண்டாம் என்று நானும் உங்­க­ளுக்குச் சொல்­கிறேன். அதற்­கான காரணம் எல்­லோ­ருக்கும் தெரியும். நமது மக்­க­ளுக்கு நச்சு மருந்­து­களைத் தந்து, நமது மக்­களை அழிக்­கப்­பார்க்கும் ஒரு கூட்­டத்­தி­னர்தான் அவர்­க­ளென்­பது மிகவும் தெளி­வாகத் தெரி­கி­றது! அதனால் நமது பெளத்த மக்கள் பாது­காப்­பாக இருக்க வேண்டும்.

அந்தக் கடை­க­ளுக்கு செல்­லவும் வேண்டாம். பொருள்­களை வாங்­கவும் வேண்டாம். அவற்றைச் சாப்­பிடும் நமது இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு எதிர்­கா­லத்தில் குழந்தைப் பேறு இல்­லாமல் போக­லா­மென்று நான் நினைக்­கிறேன். அதே­போல அந்த மாத்­தளை வைத்­தியர் செய்­துள்ள வீர­தீரச் செயல்கள் பற்­றியும் எல்­லோ­ருக்கும் தெரி­யும்­தானே.

லட்­சக்­க­ணக்­கான நமது குழந்­தை­களை அவர்கள் அழிக்­கின்­றனர். இவ்­வா­றான இனத் துரோ­கி­களைச் சுதந்­தி­ர­மாக இருக்­க­வி­டு­வது நல்­ல­தல்ல! யாரோ சில நல்ல தாய்­மார்கள் ‘அவர்­களைக் கல்­லெ­றிந்து கொல்ல வேண்டும்’ என்று சொன்­னார்­களே. அதைப்­போல நான் சொல்­ல­வில்லை. ஆனாலும் செய்ய வேண்­டி­யது அது ஒன்­றுதான் !” – என்­பதே அந்த மகா­நா­யக்க தேரரின் உபன்­யாசம்!

மகா­நா­யக்க தேரரின் உபன்­யா­சத்தில் அடங்­கி­யுள்ள தக­வல்கள் மற்றும் தற்­போ­தைய நிலையில் தெற்கில் நிலவும் பிர­ப­ல­மான மனப்­பி­ராந்­திகள் அனைத்­துமே முற்­றிலும் பொய்­யா­னவை. சிங்­க­ள­வ­ருக்கு முஸ்­லிம்கள் நச்சுப் பொருட்­களைக் கொடுத்­தார்கள் என்­ப­தற்­கான எந்­த­வொரு ஆதா­ரங்­களோ தக­வல்­களோ பொலி­ஸாரின் விசா­ர­ணை­க­ளிலோ, நீதி­மன்ற நட­வ­டிக்கைப் பதி­வு­க­ளிலோ இது­வரை நிரூ­ப­ண­மாகி இல்­லவே இல்லை. உண்­மை­யி­லேயே நடந்­து­கொண்­டி­ருப்­பது இந்தக் கதை­க­ளுக்கு மாறா­ன­வையே! அதா­வது, தேரர் சொல்லும் – வைத்­தியர் பற்­றிய விடயம் முற்­றிலும் பொய்­யா­ன­தென இன்று நடந்­து­வரும் பல்­வேறு விசா­ர­ணை­களின் மூலம் நிரூ­ப­ண­மாகி வரு­கி­றது. உண்மை நிலை இவ்­வா­றி­ருக்­கையில் பிக்­குகள் சமூ­கத்தின் பிர­தான பிக்கு ஒருவர், நிரூ­பிக்­கப்­ப­டாத இவ்­வா­றான பொய்­யான விட­யங்­களை முன்­வைத்து, முஸ்­லிம்­களின் கடை­களில் உண்ண வேண்­டா­மெனக் கோரி நிற்­பதும், லட்­சக்­க­ணக்­கான தமது குழந்­தை­களைக் கொன்று விட்­டார்கள் எனும் பட்­ட­வர்த்­த­ன­மான பொய்­களைச் சொல்­வதும் ஒரு­வ­கையில் தேரர் தனது எல்­லை­யற்ற குரோ­தத்­தையும் அறி­யா­மை­யையும் வெளிப்­ப­டை­யாகக் காட்டிக் கொள்­வ­தே­யாகும்.

மறு­புறம் – அந்த வைத்­தி­யரைக் கல்­லெ­றிந்து கொல்ல வேண்டும் – எனச் சொல்­வதன் மூல­மாக அந்தத் தேரரின் தீவிர பெளத்த விரோத, கொடூ­ரத்­தன்மை வெளிப்­ப­டு­கின்­றது

இன்­னொரு சந்­தர்ப்­பத்தில் – ‘அந்தச் சட்ட திட்­ட­மெல்லாம் சரி­வ­ராது!’ – என்றும் இத் தேரர் சொல்­லி­யுள்ளார். அதா­வது, சில முஸ்லிம் நாடு­களில் உள்ள கல்­லெ­றிந்து கொல்லும் கொடிய முறை­மையைத் தானும் அங்­கீ­க­ரிப்­ப­தாகத் தேரரும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்­கிறார். கல்­லெ­றிந்து கொல்லும் வழி­மு­றையைச் சொல்லும் ஒரு மதத்தைப் பின்­பற்றும் ஒரு வைத்­தி­யரைக் கல்­லெ­றிந்து கொல்ல வேண்­டு­மென பெளத்த தேரர் ஒருவர் சொல்­வதன் ஊடாக அந்த வைத்­தி­யரின் மதத்தை பெளத்த மதத்தை விடவும் அறி­வு­பூர்­வ­மான, நியா­ய­மான ஒரு மத­மாக ஏற்று அங்­கீ­க­ரிப்­ப­தாக இல்­லையா? அதா­வது, பெளத்த சட்­டமும் அல்­லாத, ரோம டச்சுச் சட்­டமும் அல்­லாத தலி­பா­னியச் சட்­டத்­தையே – பெளத்த மகா­நா­யக்க தேரர் என்ற வகையில் தானும் ஏற்றுக் கொள்­கிறார் என்­றல்­லவா அர்த்­த­மா­கி­றது !

‘இலங்­கைக்கு ஒரு ஹிட்­லர்தான் தேவை !’ என்றும் சில காலங்­க­ளுக்கு முன்பு இதே தேரரின் பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலையில் இருக்கும் இன்­னொரு தேரரும் சொல்­லி­யி­ருந்தார். அதற்­காக அன்று அவர் கோத்­தா­பய ராஜ­பக்­ ஷவையே சிபா­ரிசு செய்­தி­ருந்தார்.

அஸ்­கி­ரிய பீடத்தார் இவ்­வாறு பெளத்த விரோத, தார்­மீ­கத்­துக்கு மாறான ஒரு பெளத்த நிறு­வ­ன­மாக மாறிப்­போ­யுள்ள இக்­கா­லப்­ப­கு­தியில் பெளத்­தர்கள் தம்மைத் தாமே கேட்­டுக்­கொள்ள வேண்­டி­ய­தொரு கேள்வி உள்­ளது.

அதா­வது, பெளத்த மதத்­தையும், பெளத்­தர்­க­ளையும் உண்­மை­யி­லேயே இன்று அழித்துக் கொண்­டி­ருப்­பது, – சிங்­க­ள­வர்­க­ளுக்கு மலட்டுக் குளிசை கொடுப்­ப­தா­கவும், பெண்­களின் பலோப்­பியன் குழாய்­களில் முடிச்சுப் போடு­வ­தா­கவும் சொல்­லப்­படும் அந்த முஸ்லிம் வைத்­தி­யரா ? அல்­லது, புத்த பிரா­னையே துடி­து­டிக்கக் கொலை­செய்யும் இவ்­வா­றான (போலி) பெளத்த பிக்­கு­களா ? என்­பதே அக்­கேள்­வி­யாகும் !

ஒரு மதத்தைச் சார்ந்த சமூ­கத்­தாரின் கடை­களைப் பகிஷ்­க­ரிக்­கு­மாறு கோரும், ஒரு மதச் சமூ­கத்தார் தமது லட்­சக்­க­ணக்­கான குழந்­தை­களைக் கொல்­கி­றார்கள் எனக் குற்றம் சாட்டும், அதனால் அந்த வைத்­தி­யரைக் கல்­லெ­றிந்து கொல்­வ­துதான் சரி­யெனச் சொல்லும் இத்­த­கைய செய்­கை­க­ளுக்­காக சட்டம் எவ்­வாறு செயற்­பட வேண்டும்?

அண்­மைக்­கா­ல­மாக இலங்­கையில் மிகவும் வேக­மாகப் பிர­பல்யம் அடைந்­து­வரும் சட்­ட­மொன்று உள்­ளது. அது, ஐ.சி.சி.பி.ஆர். சட்­ட­மாகும். இது­வொரு சர்­வ­தேச சட்டப் பிர­க­ட­ன­மாகும். இச்­சர்­வ­தேச பிர­க­ட­னத்தில் இலங்­கையும் கைச்­சாத்­திட்­டி­ருப்­ப­த­னூ­டாக இச்­சட்டம் இலங்­கை­யி­னதும் சட்­ட­மாகும். உண்­மை­யி­லேயே இச்­சட்­டத்தின் நோக்­க­மா­னது, பிர­ஜை­களின் சிவில் மற்றும் அர­சியல் உரி­மை­களைப் பாது­காப்­பதே ஆகும். அத­னால்தான் இச்­சட்டம் – ‘சர்­வ­தேச சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் பட்­டயம்’ (International Covenants of Civil and Political Rights – ICCPR) எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. ஆயினும் தற்­போது இலங்­கையில் பிர­ஜை­களின் சிந்­திக்கும் உரி­மை­யையும் கருத்துச் சுதந்­தி­ரத்­தையும் ஒடுக்­கு­வ­தற்கே இச்­சட்டம் தொடர்ந்து பாவிக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்த சட்­டத்தின் கீழ் ஷக்­திக்க சத்­கு­மார எனும் சிறு­க­தை­யாளர் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கும் மேலாகத் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். இச்­சட்­டத்தின் 20 ஆவது பிரிவு – வேறு­ப­டுத்தி, பிரித்துப் பார்ப்­பது, இனத்­துவ, சாதிய அல்­லது மத அடிப்­ப­டை­யி­லான, மதக் குரோ­தத்­துக்கு, வன்­மு­றைக்குத் தூண்­டு­வதும் பரப்­பு­வதும் தடுக்­கப்­ப­டு­கி­றது – எனும் அடிப்­ப­டை­யி­லேயே இவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

ஷக்­திக்க சத்­கு­மா­ரவின் சிறு­க­தையில் எந்த இடத்­திலும் இத்­த­கைய ‘வன்­மு­றைக்குத் தூண்­டுதல்’ இல்லை. ‘மதக் குரோ­தத்தைப் பரப்­பு­வதும்’ இல்லை. ஆயினும் இவை எல்லாம் தாரா­ள­மா­கவே அஸ்­கி­ரிய பீடத்தின் மகா­நா­யக்க தேரர் வரக்­கா­கொட ஸ்ரீ ஞான­ர­தன அவர்­களின் ‘உபன்­யாச’த்தில் உள்­ளன. ஆயினும், ஷக்­திக சத்­கு­மா­ரவின் மீது பொலிஸார் பிர­யோ­கித்த இச்­சட்டம் இந்த தேரரின் மீதும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­மென நான் நினைக்­க­வில்லை.

இந்த சட்­டத்­துக்கும் மேல­தி­க­மாக, இது மதம் சார்ந்த ஒரு சிக்கல் என்ற வகை­யிலும் முக்­கி­ய­மா­னது. குற்­ற­வியல் சட்டம் (Penal Code) மற்றும் ICCPR இரண்­டை­யுமே ஒரு­பக்கம் வைத்­து­விட்டு, எமது மூல சட்­ட­மான அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தின் அடிப்­ப­டையில் நோக்­குவோம். அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது பிரிவு ‘… பெளத்த சாச­னத்தை பேணிப் பாது­காத்துப் போஷிப்பது அரசின் பொறுப்பாகும்’ என்கிறது. இதன்படி, இத்தகைய பிக்குகளிடமிருந்து ‘பெளத்த சாசனத்தைக் காப்பாற்றிப் பேணிப்பாதுகாத்துப் போஷிப்பது’ அரசின் தலையாய பொறுப்பாகும். இவ்வாறு பேணிப் பாதுகாத்துப் போஷிப்பது அரசின் பொறுப்பு என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது வேறு விடயம். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களுள் பிரதானமானது – பெளத்த தர்மம் என்பதும் பெளத்த சாசனம் என்பதும் இரு வேறான விடயங்கள் என்பதுடன், இவ்விரண்டும் ஒத்திசைவாகாத பாரிய வேறுபாடுகளையும் கொண்டவையாகும். சாசனத்தைப் பேணிக் காப்பதென்பது பெளத்த தர்மத்தைக் கட்டாயமாகப் பேணிக்காப்பதல்ல என்பதனாலாகும்.

எல்லா மதங்களையும் பொறுத்தவரை, வரலாறு நெடுகிலும் நிகழ்ந்திருப்பதும், தற்போது நிகழ்ந்து வருவதும் – சாசனத்தின் மூலம் தர்மம் பேணிப் பாதுகாக்கப்படாமையே ஆகும். இறுதியாக மீட்டிப் பார்க்கும்போது இப்போது நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம் சாசனமே (மதக் கட்டமைப்பு) தவிர, தர்மம் அல்ல. வரக்காகொடவின் ‘உபன்யாசம்’ இதற்குச் சான்று பகர்கிறது.

சிங்களத்தில்: காமினி வியங்கொட
தமிழில்: அஜாஸ் முஹம்மத்

நன்றி: ‘அணித்தா’ வார இதழ்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.