முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றில் கலந்தாலோசனை

0 707

முஸ்லிம் அமைச்­சர்கள் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து ஒரு மாதம் பூர்த்­தி­ய­டைந்­துள்ள நிலையில் தங்­க­ளது எதிர்­கால அர­சியல் தீர்­மா­னங்கள் குறித்து எதிர்­வரும் 11 ஆம் திகதி பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் ஒன்­று­கூடி ஆரா­ய­வுள்­ளனர்.

இரா­ஜி­னாமா செய்து கொண்­டுள்ள முன்னாள் அமைச்­சர்கள் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை ஏற்­பதா? இல்­லையா என்­பது பற்றி தீர்­மானம் மேற்­கொள்­வார்கள் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌஸி தெரி­வித்தார்.

கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி 4 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­களும், 4 இரா­ஜாங்க அமைச்­சர்­களும், ஒரு பிர­தி­ய­மைச்­சரும் என 9 முஸ்லிம் அமைச்­சர்கள் 10 அம்­சக்­கோ­ரிக்­கை­களை முன்­வைத்து தமது அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்­டனர்.

இரா­ஜி­னாமா செய்து இரு வாரங்­களில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் கபீர் ஹாஷிம் ஆகிய இரு­வரும் தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொண்­டனர்.

11 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்தில் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளன.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.