இலங்கைக்கு மேலும் 500 ஹஜ் கோட்டா

0 621

இலங்­கைக்கு இவ்­வ­ருடம் 500 மேல­திக ஹஜ் கோட்­டாவை வழங்­கு­வ­தற்குத் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கார அமைச்சு ஜித்­தா­வி­லுள்ள இலங்கை கொன்­சி­யூ­ல­ருக்கு நேற்று தொலை­பே­சி­யூ­டாக அறி­வித்­துள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்தார்.

சவூதி ஹஜ் அமைச்சு இலங்­கைக்­கான ஹஜ் கோட்­டாவை 500 இனால் அதி­கரித்துள்­ளமை தொடர்­பான எழுத்து மூல­மான ஆவ­ணத்தை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தா­கவும் உரிய கடிதம் கிடைக்­கப்­பெற்­றதும் மேல­திக ஹஜ் கோட்­டாவைப் பகிர்ந்­த­ளிப்­பது தொடர்பில் அரச ஹஜ் குழு கலந்­து­ரை­யாடி தீர்­மானம் எடுக்­க­வுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இதே­வேளை, மேல­தி­க­மாகக் கிடைக்­க­வுள்ள ஹஜ் கோட்டா தொடர்பில் இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ளும்­வரை பொது­மக்கள் மேல­திக கோட்­டாவில் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வது தொடர்பில் போலி முக­வர்­க­ளிடம் ஏமாற்­ற­ம­டைய வேண்டாம் எனவும் எவ­ருக்கும் முற்­பணம் செலுத்த வேண்­டா­மெ­னவும் அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம். பாஹிம் தெரி­வித்தார்.

கடந்த காலங்­களில் மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்ற சந்­தர்ப்­பங்­களில் போன்று இவ்­வ­ருடம் ஊழல்­க­ளுக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­பட மாட்­டா­தெ­னவும் மேல­திக ஹஜ் கோட்டா மூலம் ஏமாற்று நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முயற்­சிப்­பவர்களுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் கூறினார்.

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மைக்­காக சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்சு ஏற்­க­னவே 3500 ஹஜ் கோட்டா வழங்­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. 3500 ஹஜ் கோட்­டாக்­களுக்குமான ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் தெரிவு செய்­யப்­பட்டு ஏற்­பா­டுகள் அனைத்தும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா கிடைக்கவுள்ளது.

மேலதிக ஹஜ் கோட்டா தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விசேட கூட்டம் ஒன்றினை அரச ஹஜ் குழு நடத்தவுள்ளது.

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.