சுற்று நிருபத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

0 759

பொது­நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் வெளி­யிட்­டி­ருந்த அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

அரச சேவை­யி­லுள்ள பெண்கள் சேலை அல்­லது ஒசரி என்ற ஆடையே அணிந்து கட­மைக்கு வர­வேண்டும் என்று பொது­நிர்­வாக அமைச்சு வெளி­யிட்­டி­ருந்த சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களை செய்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை பொது­நிர்­வாகம் அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­தி­ருந்தார். இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் அர­ச­சே­வையில் உள்ள பெண்கள் சேலை அல்­லது ஒசரி அல்­லது எவ்­வ­கை­யான கௌரவமான ஆடை­க­ளையும் அணி­ய­மு­டி­யு­மென்றும் அந்த ஆடை முகத்தை மறைக்கக் கூடி­ய­தாக இருக்­கக்­கூ­டா­தெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­துக்கே அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

ஏப்ரல் 21 தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பொது­நிர்­வாக அமைச்சு அரச நிறு­வ­னங்­களில் கட­மை­யாற்றும் பெண் ஊழி­யர்கள் சேலை அல்­லது ஒசரி அணிய வேண்­டு­மென சுற்று நிரு­ப­மொன்­றினை வெளி­யிட்­டது. இச்­சுற்று நிருபம் அரச ஊழி­யர்­களின் அடிப்­படை உரிமை மீறல் என பலத்த எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

அபா­யாவும் பர்­தாவும் அணிந்து சென்ற முஸ்லிம் பெண் ஊழி­யர்கள் இதனால் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கி­னார்கள். பெரும்­பா­லான அரச நிறு­வ­னங்­களில் கட­மை­யாற்றும் பெண் ஊழி­யர்கள் வேலைக்குச் செல்­லாது விடு­மு­றையில் இருந்­தனர்.

மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் நூற்­றுக்கும் மேற்­பட்ட முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு வேண்­டி­யி­ருந்தார். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தனர். குறிப்­பிட்ட சுற்று நிருபம் முஸ்லிம் பெண் ஊழி­யர்­களை அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­தாக முறை­யிட்­டனர்.

இதே­வேளை அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தை வெளி­யிட்ட பொது நிர்­வாக அமைச்சின் செய­லாளர் ஜே.ஜே. ரட்­ண­சிரி பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வினால் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்டார். குறிப்­பிட்ட சுற்று நிருபம் கார­ண­மாக முஸ்லிம் பெண் ஊழி­யர்கள் பலர் கட­மைக்குச் செல்­லாது தவிர்ந்­தி­ருப்­பது தொடர்பில் அவர் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.

இந்­நி­லை­யிலே குறிப்­பிட்ட சுற்று நிருபம் திருத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வுள்­ளது. அதனடிப்படையில் அரச பெண் ஊழியர்கள் சேலை அல்லது ஒசரி அல்லது முகத்தை மறைக்காத வகையில் எந்த வகையான கௌரவமான ஆடையையும் அணியலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்று நிருபம் திருத்தங்களுக்குட்பட்டதன் பின்பு முஸ்லிம் பெண் ஊழியர்கள் அபாயா ஹிஜாப் அணிந்து செல்லமுடியும்.

vidivelli 

 

Leave A Reply

Your email address will not be published.