கல்முனை விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும்

0 562

நீண்­ட­கா­ல­மாக சர்­ச்­சைக்­கு­ரிய விவ­கா­ர­மாக கல்­முனை உப­பி­ர­தேச செய­லகம் இருந்து வரு­கி­றது. அவ்­வி­வ­காரம் தற்­போது சந்­திக்கு வந்­துள்­ளது. கல்­முனை உப­பி­ர­தேச செய­ல­கத்தை பிர­தேச செய­ல­க­மாகத் தர­மு­யர்த்­திக்­கொள்ள மேற்­கொள்­ளப்­படும் முயற்­சிகள் அங்கு இன­ரீ­தி­யி­லான முறுகல் நிலை­யினை உரு­வாக்­கி­விடும் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

கல்­மு­னையில் பிர­தேச செய­ல­க­மொன்றும், உப­பி­ர­தேச செய­ல­க­மொன்றும் இயங்கி வரு­கின்­றன. முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­களை கல்­முனை பிர­தேச செய­லகம் நிர்­வ­கித்து வரு­கி­றது. இதே­வேளை, தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­களை கல்­முனை உப­பி­ர­தேச செய­லகம் நிர்­வ­கிக்­கி­றது. கல்­முனை உப­பி­ர­தேச செய­ல­கத்தை பிர­தேச செய­ல­க­மாக தர­மு­யர்த்த வேண்­டு­மென்­கின்ற கோரிக்கை தமிழ் தரப்­பு­களால் நீண்ட கால­மாக முன்­வைக்­கப்­பட்­டாலும் அக்­கோ­ரிக்கை தற்­போது மிகவும் வலுப்­பெற்­றுள்­ளது.

தற்­போது விவா­திக்­கப்­பட்டு வரும் வரவு – செல­வுத்­திட்­டத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கான தேவைப்­பாடு அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவு தேவை என்­பதை உணர்ந்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது கோரிக்­கையை நிறை­வேற்­று­மாறு பிர­த­ம­ருக்கு அழுத்தம் கொடுத்து வரு­கி­றது. பேச்­சு­வார்த்­தை­களும் நடத்­தி­வ­ரு­கி­றது.

கல்­முனை உப­பி­ர­தேச செய­ல­கத்தை பிர­தேச செய­ல­க­மாக தர­மு­யர்த்த வேண்­டு­மாயின் அதற்­கு­ரிய நிர்­வாக எல்­லைகள் வரை­ய­றுக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு எல்லை நிர்­ண­யிக்­கப்­ப­டும்­போது கல்­முனை நகர்ப்­ப­குதி கல்­முனை தமிழ்ப்­பி­ரிவு பிர­தேச செய­ல­கத்தின் நிர்­வா­கத்­துக்கு உட்­பட்­டு­விடும். இத­னாலே முஸ்­லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கின்­றனர்.

கல்­முனை நகர்ப்­ப­கு­தி­யி­லேயே அரச நிறு­வ­னங்கள், மத்­திய சந்தை, வர்த்­தக நிறு­வ­னங்கள் என்­பன உள்­ள­டங்­கி­யுள்­ளன. அது ஒரு மைய­மாக இருக்­கி­றது. அதனால் முஸ்­லிம்கள் கல்­முனை நக­ரத்தை இழப்­ப­தற்கு விரும்­ப­வில்லை. தமிழ்த்­த­ரப்பும் முஸ்லிம் தரப்பும் இவ்­விவ­காரம் தொடர்பில் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் கலந்து பேசி ஒரு தீர்­மா­னத்­துக்கு வரு­மாறு பிர­தமர் இரு சாரா­ரையும் வேண்­டி­யுள்ளார்.

“இப்­பி­ரச்­சி­னையில் முஸ்லிம்– தமிழ் மக்­க­ளி­டையே பிரச்­சி­னைகள் ஏற்­ப­டாத வகையில் தீர்­வு­களை எட்­டவே முயற்­சிக்­கிறோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி சுமு­க­மாக தீர்வு காணத் தயா­ராக இருக்கிறோம்” என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்­ளமை கவனத்­திற்­கொள்­ளத்­தக்­கது. தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இவ்­வாறு தெரி­வித்­தாலும் தமிழ் அர­சி­யல்­வா­திகள் சிலர் இவ்­வி­வ­கா­ரத்தில் இன­வாத கருத்­து­க­ளையே தெரி­வித்து வரு­கின்­றனர். இது தவிர்க்­கப்­பட வேண்டும்.

இவ்­வி­ட­யத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ள கருத்­துகள் நோக்கத்தக்கவை. ‘கல்­முனை உப­பி­ர­தேச செய­ல­கத்தை நிலத்­தொ­டர்­பற்ற ரீதியில் பிர­தேச செய­ல­க­மாக தர­மு­யர்த்­தாமல் இரு சமூ­கங்­களும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய வகையில் எல்லை மீள் நிர்­ணயம் செய்­யப்­பட்டு நிலத்­தொ­டர்பு அடிப்­ப­டையில் மாத்­தி­ரமே தர­மு­யர்த்த வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் கூறி­யுள்ளார்.

ஒரு சமூகம் மாத்­திரம் பிர­தேச செய­லகம் ஒன்­றுக்குள் உள்­வாங்­கப்­ப­டக்­கூ­டாது. இது அப்­ப­கு­தியில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தாது. பிர­தேச செய­லக எல்­லைகள் ஒரு சமூ­கத்­துக்கு மாத்­திரம் பிரித்துக் கொடுக்­கப்­ப­டக்­கூ­டாது. இவ்­வா­றான ஒரு சட்டம் எமது நாட்டில் இல்லை.

இந்த முயற்சி முஸ்­லிம்­க­ளுக்கும், தமி­ழர்­க­ளுக்­கு­மி­டையில் முறுகல் நிலையை உரு­வாக்­கி­வி­டக்­கூ­டாது. நிர்­வாக மையங்­க­ளான பிர­தேச செய­ல­கங்கள்   இனரீதியில் உரு­வாக்­கப்­பட்டால் அது பாரிய அழி­வு­க­ளுக்கே கார­ண­மாக அமையும். இதுபற்றி இரு தரப்­பி­னரும் சிந்­திக்க வேண்டும். கலந்­து­ரை­யா­டல்கள், விட்­டுக்­கொ­டுப்­புகள் மூலம் தீர்வொன்றினை எட்ட வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.