வாழ்வுரிமையின் பாதுகாப்பு

0 731
  • எம்.எம்.ஏ.ஸமட்

வாழ்­வு­ரிமை அல்­லது வாழ்­வ­தற்­கான உரிமை என்­பது எல்லா மனி­த­ருக்கும் உரித்­தான ஓர் அடிப்­படை உரி­மை­யாகும். ஒரு தனி­நபர், ஒரு சமூகம் என அனை­வ­ருக்­கும் வாழ்­வ­தற்­கான உரிமை, சுதந்­திரம் பாது­காப்பு உண்டு என உலக மனித உரி­மைகள் சான்­றுரை தெளி­வாகச் சுட்­டிக்­காட்­டு­கி­றது. அந்­த­வ­கையில் இந்­நாடும் இந்­நாட்டில் வாழும் உரி­மையும் அனைத்து இன மக்­க­ளுக்­கு­முள்­ளது.

ஆனால், இந்­நாடு எல்­லோ­ருக்கும் சொந்தம் என்ற மனப்­பாங்கு எல்­லோ­ரி­ட­மு­மில்லை. இந்­நாட்டில், பெரும்­பான்­மை­யாக   பௌத்த சிங்­கள மக்­களே வாழ்­கின்­றனர் என்­பது புள்­ளி­வி­ப­ரங்­களின் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உண்மை. அதற்­காக ஏனைய இனத்­த­வர்கள் வந்­தேறு குடி­க­ளல்ல.

இந்­நாட்டுப் பிர­ஜைகள் என எவ­ரெ­வ­ரெல்லாம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­களோ அவர்கள் எல்­லோரும் இந்­நாட்டின் சொந்­தக்­கா­ரர்கள். இந்­நாடு அவர்­க­ளுக்கும் சொந்தம். அவர்கள் அனை­வரும் சகல உரி­மை­களும் பெற்று இம்­மண்ணில் வாழ்­வ­தற்கு கௌர­வ­மா­ன­வர்கள். ஆனால், காலத்­திற்குக் காலம் சிறு­பான்மை மக்­களின் வாழ்­வு­ரிமை கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

தெற்கில் ஆண்­டாண்டு காலம் நல்­லி­ணக்­கத்­து­டனும் சக­வாழ்­வு­டனும் வாழும்  சிங்­கள – முஸ்லிம் மக்­களின் சக­வாழ்வைச்  சீர்­கு­ழைத்து இன­மு­று­கலை ஏற்­ப­டுத்தும் கைங்­க­ரி­யங்­களை பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள வங்­கு­ரோந்து அர­சி­யல்­வா­தி­களும், பௌத்த சிங்­கள கடும்­போக்­கா­ளர்­களும், இவர்­க­ளுக்கு மறை­மு­க­மா­கவும் நேர­டி­யா­கவும் துணை­நிற்கும் சில ஊட­கங்­களும் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுத்­தி­ருப்­பதை வர­லாற்று நெடு­கிலும் காண முடியும்.

இவ்­வாறே, வடக்­கிலும், கிழக்­கிலும் தொன்­று­தொட்டு ஒற்­று­மை­யாக வாழ்ந்த தமிழ் முஸ்­லிம்­களை ஒரு­வரை ஒருவர் சந்­தேகக் கண்­கொண்டு நோக்கச் செய்தும் விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளையும் புரிந்­து­ணர்­வு­க­ளையும் இல்­லா­ம­லாக்­கியும் தமி­ழனா, முஸ்­லிமா  என்று சிந்­திக்கச் செய்­ததும்  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்ற சக்­தி­கள்தான் என்­பது வெள்­ளி­டை­மலை.

சிறு­பான்­மை­யி­ன­ரான தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும்   ஆண்­டாண்டு கால­மாக இம்­மண்ணை நேசித்து வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­வர்கள். இத்­தே­சத்தைக் கௌர­வப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். இந்­நாட்­டுக்­காக உயிர்­களைத் தியாகம் செய்­தி­ருக்­கி­றார்கள். அவர்­களால் இந்த தேசம் மாண்பு பெற்­றி­ருக்­கி­றது என்­பதை பெரும்­பான்மை சமூ­கத்­தி­லுள்ள பலர் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தாலும், பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான சக்­திகள் இவ்­வுண்­மை­களை மறைத்து, இந்­நாட்டில் வாழும் சிறு­பான்­மை­யினர், குறிப்­பாக முஸ்­லிம்கள் இந்­நாட்டின் பெரும்­பான்மை சமூ­கத்­திற்கு எதி­ராகச் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற போலிப் பிர­சா­ரங்கள் காலத்­திற்குக் காலம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­தா­னத்­திற்­கு­ரிய விட­ய­மாகும்.

இவ்­வா­றான சக்­தி­களின் போலிப் பிர­சா­ரங்­களின் மூலம் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள அப்­பாவி இளை­ஞர்கள் மூளைச்­ச­லவை செய்­யப்­பட்டு, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களில் ஈடு­பட தூண்­டப்­பட்­டதன் எதி­ரொ­லிதான் 2014இல் அளுத்­கம தாக்­குதல் முதல் 2018 இல் கண்டி, அம்­பாறை உள்­ளிட்ட பிர­தே­சங்கள் வரை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்கள் என்­பதை மறக்க முடி­யாது. இச்­சம்­ப­வங்கள் முஸ்லிம் தேசி­யத்தின் வாழ்­வு­ரி­மைக்­கான பாது­காப்பை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யது மாத்­தி­ர­மின்றி, வாழ்­வா­தா­ரத்­துக்கும் பேரி­டியை ஏற்­ப­டுத்­தி­யதை கண்டி, அம்­பாறை வன்­மு­றை­களின் ஓராண்டு நினைவு நாட்­களில் ஞாப­மூட்ட  வேண்­டி­யுள்­ளது.

கடந்த காலமும் கசப்­பான உண்­மை­களும்

முஸ்­லிம்­களின் வளர்ச்சி பேரி­ன­வா­தத்தின் கழு­குக்­கண்­களை சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலம் தொட்டுக் குத்­திக்­கொண்டு இருப்­பதை  மறுப்­ப­தற்­கில்லை. குறிப்­பாக முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார வளர்ச்­சியை அழிப்­பதே பேரி­ன­வா­தத்தின் இலக்கு என்­பதை 1915ஆம் ஆண்டு இடம்­பெற்ற கம்­பளைக் கல­வரம் முதல் அம்­பா­றை­யிலும், கண்டி மாவட்­டத்தின் பல பிர­தே­சங்கள் மற்றும் நாட்டின் இதர பிர­தே­சங்­க­ளிலும்  அரங்­கேற்­றப்­பட்ட  இன­வெ­றி­யாட்டம் நன்கு புலப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இதனால், இலங்கை முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்கு பாது­காப்­பற்ற  நாடு என சர்­வ­தேச மன்­னிப்புச் சபை கூட  அறிக்கை விடு­வ­தற்கு வழி­வ­குத்­த­தோடு, முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­ட­தா­கவும் வாழ்­வா­தா­ரத்­திற்கும் வாழ்­வு­ரி­மைக்கும் ஏற்­பட்ட பேரி­டி­யா­கவும் நோக்­கப்­பட்­டது.

தமிழ் சமூகம் கல்­வியில் முன்­னேறிக் காணப்­பட்­ட­தொரு கால­கட்­டத்தில் இச்­ச­மூ­கத்தின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­கு­றி­யாக்கி, உரி­மை­களை மறுத்து அப்­பாவி இளை­ஞர்­களை ஆயு­தப்­போ­ராட்­டத்­துக்கு இழுத்துச் சென்­றது பேரி­ன­வா­தி­களின் இருண்ட மனப்­பாங்­குதான்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களை 30 வருட கால அழி­வு­களைச் சந்­திக்கச் செய்த பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள வங்­கு­ரோத்து அர­சி­யல்­வா­தி­களும், கடும்­போக்­கா­ளர்­களும் இவர்­களை ஊக்­கப்­ப­டுத்தும் சில ஊட­கங்­களும், முஸ்­லிம்­களின் கலை, கலா­சார, மதப் பண்­பாட்டு விழு­மிய வாழ்க்கை முறை­யிலும், ஏனைய கல்வி, வர்த்­தகம் உள்­ளிட்ட விட­யங்­க­ளிலும் வேண்­டு­மென்றே மூக்கை நுளைத்­த­தையும் வர­லாற்றில் அவ­தா­னிக்­கலாம்.

முஸ்­லிம்கள் குறித்­தான தப்­ப­பிப்பி­ரா­யங்­களை பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்பி போலிக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து இன வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்ட கடந்த கால சம்­ப­வங்கள் அநே­க­முள்­ளன.

அவற்றில்.  2014இல் அளுத்­கம தாக்­குதல் சம்­பவம் முதல் அம்­பாறை, கண்டி வன்­மு­றைகள் வரை மேற்­கொள்­ளப்­பட்ட இன­வெ­றி­யாட்­டங்கள் முஸ்­லிம்­களின் வாழ்­வா­தா­ரத்­தையும், வாழ்­வு­ரி­மை­யையும் கேள்­விக்­குட்­ப­டுத்தி பாது­காப்­பற்ற நிலை­மை­க­ளுக்­குத்­தள்­ளிய வர­லாற்­றி­லி­ருந்து பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் இன்னும் நூறு வீதம் மீள­வில்லை.

அளுத்­கம, கிந்­தோட்டை தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­களில் பலர் இன்னும் அவர்­களின் பழைய வாழ்­வா­தர நிலை­க­ளுக்கு மீளச் செல்­ல­வில்லை என்­ப­து­போல கண்டி,திகன, அம்­பாறைத் தாக்­கு­தல்­களில் வாழ்­வா­தா­ரத்தை இழந்­த­வர்கள் இன்னும் முழு­மை­யாகக் கட்­டி­யெ­ழுப்ப முடி­யா­த­வர்­க­ளாக உள்­ள­தாக அவர்கள் கூறு­வதைக் கேட்க முடி­கி­றது.

2015ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட ஆட்­சியில் 2015 முதல் 2018 ஒக்­டோபர் ஆட்சிப் புரட்சி நடந்த நாள் வரை இருந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சாங்கத்தின் பக்கம் இருந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதியை விரை­வாகப் பெற்­றுக்­கொ­டுக்க அவர்­களால் , கொடுக்­கப்­பட்ட அழுத்­தங்கள் வினைத்­திறன் மிக்­க­தாக இருக்க வில்லை என்­பதே பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஆதங்­க­மாகும்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு குறிப்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கும் அர­சாங்­கத்­திற்கு அதிக அழுத்தம் கொடுக்­கக்­கூ­டிய  சந்­தர்ப்பம் அமைந்தும் கூட இவ்­விரு கட்­சி­களும் அச்­சந்­தர்ப்­பத்தை தவ­ற­விட்­டன என்ற பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­களின் குற்­றச்­சாட்டை மறுக்­கவும் முடி­யா­துள்­ளது.

முஸ்­லிம்­களின் அதி­ருப்­தியும் வர­வு – ­செ­லவுத் திட்­டமும்

அளுத்­கம முதல் அம்­பாறை வரை மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பான வழக்­குகள் பதி­யப்­பட்டு சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பினும், இந்­ந­ட­வ­டிக்­கை­களில் பல முஸ்­லிம்கள் திருப்தி அடை­ய­வில்லை என்­பதைச் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

அளுத்­கம, கிந்­தோட்டை பிர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கான நஷ்ட ஈடு­களும் இன்னும் முழு­மை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை. வழங்­கப்­பட்ட சிறு தொகை இழப்­பீ­டு­க­ளையும் பெற்­றுக்­கொள்ள மாட்டை மலையில் சாய்க்கும் சிர­மத்தை  அவர்கள் எதிர்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற ஆதங்­கத்தின் மூலம் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்­டதில் அவர்கள் திருப்தி அடை­ய­வில்லை என்­பதைப் புரிந்து கொள்ள முடி­கி­றது.

இந்­நி­லையில், அம்­பா­றை­யிலும், திகன உட்­பட கண்டி மாவட்­டத்­திலும் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு முழு­மை­யாக எப்­போது வழங்­கப்­படும் என்ற கேள்­வியை பாதிக்­கப்­பட்ட பிர­தேச மக்கள் அர­சாங்­கத்­திடம் எழுப்பும் இச்­சந்­தர்ப்­பத்தில் 2019ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­லவுத் திட்­டத்தில் மடு தேவா­ல­யத்தை அபி­வி­ருத்தி செய்ய 200 மில்­லியன் ரூபா ஒதுக்கம், யுத்­த­கா­லத்தில் அழி­வ­டைந்த பகு­தி­களை அபி­வி­ருத்தி செய்ய  5 பில்­லியன் ஒதுக்கம்,  இயற்கை அனர்த்­தங்­க­ளினால் ஏற்­பட்ட பாதிப்­புக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈட்­டினை துரி­த­மாக வழங்க நட­வ­டிக்கை என வரவு செலவுத் திட்­டத்தில் வாசிக்­கப்­பட்­டுள்ள போதிலும் செயற்கை அனர்த்­த­மாகக் கரு­தப்­படும் வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட கண்டி, திகன மற்றும் அம்­பாறைப் பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்தி அல்­லது நஷ்­ட­ஈட்டை துரி­தப்­ப­டுத்தல் என்ற வாச­கங்கள் வாசிக்­கப்­ப­ட­வில்லை என்­பது பாதிக்­கப்­பட்ட பிர­தேச முஸ்­லி­ம்க­ளி­டையே கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதைக் காண முடி­கி­றது. இந்­நி­லையில், முஸ்லிம் அமைச்­சர்கள் உட்­பட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் அடங்­க­லாக பலர் இவ்­வ­ரவு செலவு திட்ட வாசிப்பை வர­வேற்று கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ள­தையும் காண முடி­கி­றது.

இச்­சந்­தர்ப்­பத்தில் கண்டி, திகன இன வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­துக்­க­ளுக்­கான இழப்­பீட்டை தாம­த­மின்றி வழங்க வேண்­டு­மென முஸ்லிம் அமைச்­சர்கள் பிர­த­ம­ரிடம் கோரி­யுள்­ள­தா­கவும் இழப்­பீ­டு­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கு­மாறு பிர­தமர் அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை வழங்­கி­யுள்­ள­தா­கவும் ஊட­கங்­களில் காண முடிந்­தது. தாக்­கு­தல்கள் நடந்து ஒரு வருடம் நிறை­வ­டைந்தும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான இழப்­பீட்டை அரசு வழங்­கு­வதில் இவ்­வ­ளவு தாமதம் ஏன்? என்ற கேள்­வியை பாதிக்­கப்­பட்ட மக்கள் எழுப்­பு­வ­தையும் சுட்­டிக்­காட்ட வேண்டும்.

இன வெறி வன்­மு­றை­யா­ளர்­களின் வன்­மு­றைகள் ஏற்­ப­டுத்­திய அழி­வுகள் கடந்த ஆட்­சி­யா­ளர்கள் மீதான நம்­பிக்­கையை இழக்கச் செய்­ததைப் போன்றே 2015ஆம் ஆண்டின் பின்னர், கிந்­தோட்­டையில்  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களும் கடந்த வருடம் அம்­பா­றை­யிலும், திகனை, தெல்­தெ­னிய, கட்­டு­கஸ்­தோட்டை, அக்­குறணை என பல பிர­தே­சங்­க­ளிலும் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுக்கும் அதன் அழி­வு­க­ளுக்கும்  அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட உத்­த­ர­வா­தங்­க­ளிலும், பாது­காப்­பிலும் நம்­பிக்­கை­யீ­னத்தை முஸ்­லிம்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யது என்­பதும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருந்தும் இந்த அர­சாங்­கத்­திலும் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டார்கள் என்­பது வர­லாற்றில் மறக்­கப்­ப­டாத பதிவு என்­பதை இச்­சம்­ப­வங்கள் சுட்­டிக்­காட்­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டதை ஞாபகமூட்ட வேண்­டி­யுள்­ளது.

இதற்­கான நிவா­ரணம் வழங்கும் நடை­முறை அல்­லது கால தாமதம் என்­ப­வற்றில், அர­சாங்கம் மாத்­தி­ர­மின்றி முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­தி­களும் மக்­களின் விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­கினர். நேர­டி­யா­கவும், அறிக்­கைகள் வாயி­லா­கவும் சமூக வலைத்­த­ளங்­க­ளி­னூ­டா­கவும், முஸ்லிம் அர­சியல் கட்சித் தலை­மை­களும், அர­சியல் பிர­மு­கர்­களும்  விமர்­ச­னத்­திற்கு உட்­பட்­டி­ருந்­தாலும், முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் அவர்­க­ளது சக்­திக்­குட்­பட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர் என்ற கருத்­துக்­களும் நில­வு­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற காலத்தில் உட­னடி நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் பாரா­ளு­மன்­றத்தின் நடுவே அமர்ந்து போராட்டம் நடத்­தி­யதைக் கொண்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அவர்­க­ளது சக்தி உட்­பட்ட நட­வ­டிக்­கை­களை எடுத்­தனர் என்று கூறப்­ப­டு­கி­றது.

கண்டி மாவட்ட முஸ்­லிம்­களின் வாழ்­வு­ரி­மைக்கு மாத்­தி­ர­மின்றி இலங்கை வாழ் அனைத்து முஸ்­லிம்­க­ளி­டை­யேயும் வாழ்­வு­ரி­மைக்­கான அச்சம் அக்­கா­லத்தில் நில­வி­யது. இந்த அச்சம் சில வாரங்கள் நீடித்­தன. அச்­சத்­தி­னு­ட­னான இயல்பு வாழ்வைப் பாதிக்கச் செய்த சூத்­தி­ர­தா­ரிகள் என்ற சந்­தே­கத்தின் பேரில்  கைது செய்­யப்­பட்டு சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்த முக்­கிய சூத்­தி­ர­தாரி உட்­பட சிலர் 52 நாள் ஆட்சிக் காலத்தில் விடு­தலை செய்­யப்­பட்­டமை அறிந்த விட­ய­மாகும்.

2014 முதல் 2018 வரை இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் நீதி நிலை­நாட்­டப்­பட்­டாலும் முஸ்­லிம்கள் உள­வியல், சமூக, பொரு­ளா­தார, வாழ்­வு­ரிமை ரீதி­யாக மிகவும் பாதிக்­கப்­பட்­டனர். இப்பாதிப்புக்களிலிருந்து அவர்கள் மீள்வதற்கு பல மாதங்கள் கடந்தன. இருப்பினும், அழிக்கப்பட்ட வாழ்வாதரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. இந்நாள் வரை பலர் சிரமங்களைச் சுமந்து கொண்டு வாழ்வதோடு இன்னும் பலர் அழிக்கப்பட்ட இல்லங்களை புனரமைக்க முடியாமலுமுள்ளனர். அந்த நிலையில்தான் பள்ளிவாசல்களும்  காணப்படுவதாக அறிய முடிகிறது.

இந்நிலையில், எதிர்காலம் தொடர்பில் முஸ்லிம்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்திருக்கும்  இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் சமூகத்தின் உரிமையினை எந்த விட்டுக்கொடுப்புக்களும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று அண்மையில் சம்மாந்துறையில் நடைபெற்ற வைபவமொன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் அடிப்படை உரிமையான வாழ்வுரிமை வன்முறைகளினால் கேள்விக்குட்படுத்தப்படுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்ட நிலையில் வாழ்வுரிமையும் கேள்விக்குட்பட்டது. ஏற்படுத்தப்பட்ட அழிவுகளும், அச்சுறுத்தல்களும் மீண்டும் ஏற்படாது வாழ்வுரிமை  பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான நிலை எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் எதிர்காலத்தில் ஏற்பாடதிருக்க உரிய நடவடிக்கைகளை சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னெடுப்பதும் கடப்பாடாகும். இந்நிலையில், எதிர்காலம் தொடர்பில் முஸ்லிம்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்திருக்கும்  இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் சமூகத்தின் உரிமையினை எந்த விட்டுக்கொடுப்புக்களும் இல்லாமல் பாதுக்காக்க வேண்டும் என்று ஒரு சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியதாக உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.