கல்முனை விவகாரம்: மு.கா.வுடன் பேசி தீர்வுகாண தயார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

0 666

கல்­முனை பிர­தேச செய­லகம் குறித்த பிரச்­சி­னையில்  முஸ்லிம் – தமிழ் மக்­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­ப­டாத வகையில் தீர்­வு­களை எட்­டவே முயற்சிக்கின்றோம். இந்த விட­யத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி சுமு­க­மாகத் தீர்வு காணத் தயா­ராக இருப்­ப­தா­கவும், பிர­தமர் தலை­யிட்டு தீர்­வு­களை பெற்­றுத்­தர வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு சபையில் தெரி­வித்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை  வரவு செல­வுத்­திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்­பெற்ற வேளையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா இதனை குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

கல்­முனை பிர­தேசம் தனி­யான தமிழர் செய­ல­க­மாக மாற்­றப்­பட  வேண்டும் என்­பது கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக பேசப்­பட்­டு­வரும் விடயம். இந்த விட­யத்தில் தமிழ்,  முஸ்லிம் மக்கள் மத்­தியில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட வேண்­டு­மென்ற கார­ணத்தை கருத்­திற்­கொண்டு நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் ஒருவர் கடந்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது இவ்­வி­ட­யத்தில் தவ­று­த­லான கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். இந்த விட­யத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் எந்­த­வித முரண்­பா­டு­களும் ஏற்­ப­டாத வகையில் தீர்க்­கவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பாக நாம் முயற்­சித்து வரு­கின்றோம். கல்­முனை பிர­தேச சபையில் தமிழ் செய­லகம் அமைப்­பதில் எந்த தவறும்  இல்லை. இந்த விட­யத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அதன் தலை­மை­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக உள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலைமையில் இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாளத் தயாராக உள்ளோம். அடுத்த வாரத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.