மாகந்­துரே மதூஷ் விவ­காரம்: லத்தீப் தலைமையில் டுபாய்க்கு விசேட குழு

0 619

அபு­தாபி ஆறு நட்­சத்­திர ஹோட்­டலில்  வைத்து கைது செய்­யப்­பட்டு தற்­போது டுபாய் தலைமை பொலிஸ் நிலைய கட்­டுப்­பாட்­டி­லுள்ள அல் ரபா பொலிஸ் கூண்டில் அடைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரும்   பிர­பல போதைப்­பொருள் கடத்­தற்­கா­ரரும் பாதாள உலகக் கோஷ்­டியின் தலை­வ­ரு­மான மாகந்­துரே மதூஷை இலங்­கைக்கு அழைத்­து­வரும் இராஜதந்­திர நட­வ­டிக்­கைகள் தொடரும் நிலையில், அதி­ர­டிப்­படை கட்­டளைத் தள­ப­தியும்  குற்றம், திட்­ட­மிட்ட குற்­றங்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வு­களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதி­ப­ரு­மான எம்.ஆர். லத்தீப் தலை­மை­யி­லான விசேட குழு டுபாய் நோக்கிப் பய­ணிக்­க­வுள்­ள­தாக பொலிஸ் உயர்­மட்ட தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கான அனு­மதி மற்றும் ஆலோ­ச­னை­களை பாது­காப்பு அமைச்சு பொலிஸ் திணைக்­க­ளத்­திற்கு வழங்­கி­யுள்­ளது.

குறித்த குழுவில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு, பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதி­ரடிப் படை ஆகிய 5 பிரி­வு­களின் உய­ர­தி­கா­ரிகள் உள்­ள­டங்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

மதூஷ், டுபாயை மையப்­ப­டுத்தி முன்­னெ­டுத்த போதைப்­பொருள்  வர்த்­தகம் மற்றும் அவ­ரது வலை­ய­மைப்பு தொடர்­பி­லான தக­வல்­களை டுபாய் பொலி­சா­ருக்கு முன்­வைத்து மதூஷை இலங்­கைக்கு அழைத்­து­வ­ரு­வது தொடர்பில் ஆரா­யவே, இக் குழு டுபாய்க்கு செல்­ல­வுள்­ளது.

மாகந்­துரே மதூஷ் மீது போதைப்­பொருள் பாவனை குற்­றச்­சாட்டு மட்டும் சுமத்­தப்­பட்டு இல­கு­ரக தண்­ட­னை­யொன்று விதிக்­கப்­படும் வாய்ப்­புக்கள் குறித்து பேசப்­படும் நிலை­யி­லேயே, அதனைத் தடுத்து மதூஷை இலங்­கைக்கு அழைத்­து­வந்து அவ­ரது கணக்கில் குற்­றங்கள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க இந்தக் குழு டுபாய் நோக்கி செல்­ல­வுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

இத­னி­டையே  மாகந்­துரே மதூ­ஷுடன் கைது செய்­யப்­பட்ட பாடகர்  நதீமால் பெரேரா போதைப்­பொருள் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்­லை­யென, இரத்த  பரி­சோ­த­னையில் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. டுபாய் பொலி­ஸாரை சந்­தித்­த­போது இந்த விடயம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக, அவர் சார்பில் டுபாயில் சட்ட நட­வ­டிக்­கை­களை ஆராயும் சட்­டத்­த­ரணி உதுல் பிரே­ம­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

கைது செய்­யப்­பட்­டுள்ள பாட­க­ரான அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் சார்பில் தக­வல்­களை சமர்ப்­பிப்­ப­தற்­காக, சட்­டத்­த­ரணி உதுல் பிரே­ம­ரத்ன டுபாய்க்கு சென்­றுள்ளார். அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் இலங்­கையில் மாத்­தி­ர­மின்றி சர்­வ­தேச ரீதி­யிலும் சிறந்த சிங்­கள மொழிப் பாட­கர்­க­ளாக உள்­ளனர் என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் டுபாய்  பொலி­ஸா­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தாக சட்­டத்­த­ரணி உதுல் பிரே­ம­ரத்ன  குறிப்­பிட்­டுள்ளார். இணை­யத்­த­ளத்தில் பதி­வேற்­றப்­பட்­டுள்ள இவர்கள் பாடும் காட்­சி­களை டுபாய்  பொலி­ஸா­ருக்கு காட்­டி­ய­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். இதே­வேளை, அமல் பெரே­ராவின் குரு­தியில் போதைப்­பொருள் கலந்­துள்­ளதா இல்­லையா என்­பது தொடர்­பான அறிக்கை இது­வரை கிடைக்­க­வில்லை என டுபாய் பொலிஸார் கூறி­ய­தா­கவும் சட்­டத்­த­ரணி உதுல் பிரே­ம­ரத்ன தெரி­வித்­துள்ளார். எனினும், கைது செய்­யப்­பட்­டுள்ள அமல் மற்றும் நதிமால் ஆகிய இரு­வ­ரையும் இது­வ­ரையும் சந்­திக்­க­வில்லை எனவும் அவர் கூறி­யுள்ளார்.

இதே­வேளை,  கைது செய்­யப்­பட்­டுள்ள பிர­பல போதைப்­பொருள் கடத்­தல்­கா­ரரும் பாதாள உலகக் கோஷ்­டியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரு­மான மாகந்­துரே மதூஷ் உள்­ளிட்ட சந்­தே­க­ந­பர்கள் தொடர்பில் அந்­நாட்டுப் பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணைகள் நிறை­வு­செய்­யப்­பட்­டுள்­ளன. மாகந்­துரே மதூ­ஷுடன், பிர­பல பாட­க­ரான அமல் பெரேரா, அவ­ரு­டைய மக­னான நந்­திமால் பெரேரா மற்றும் நடிகர் ரயன் வென்ங் ரோயன் உள்­ளிட்ட சந்­தே­க­ந­பர்கள் கடந்த 5 ஆம் திகதி அபுதாபியில் வைத்து  அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் டுபாய்  சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டவர்களும், சில பெண்களும் உள்ளடங்குவதாக அறிய முடிகின்றது.
-vidivelli

Leave A Reply

Your email address will not be published.