சிறுவர் பூங்காங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்

0 589

சிறு­வர்கள் தமது நேரங்­களை விளை­யாட்­டு­க­ளிலும், பொழு­து­போக்கு நிகழ்­வு­க­ளி­லுமே செல­வி­டு­வ­தற்கு விரும்­பு­கி­றார்கள். அதி­க­மாக சிறுவர் பூங்­காக்­களே அவர்­களை வெகு­வாகக் கவர்­கின்­றன.

அங்கே சிறிய தண்ணீர்த் தடா­கங்கள், மோட்­டாரில் இயங்கும் பல்­வேறு வடி­வி­லான சிறி­ய­ரக பட­குகள், மற்றும் மின்­சார ரயில்கள், ஊஞ்­சல்கள் என அவர்­க­ளது பொழுது போக்கு சாத­னங்­களை வகைப்­ப­டுத்­தலாம்.

பெற்­றோரும் விடு­முறை தினங்­களில் தங்கள் சிறு பிள்­ளை­களை அதி­க­மாக சிறுவர் பூங்­காக்­க­ளுக்கே அழைத்துச் செல்­கி­றார்கள். இவ்­வா­றான சிறுவர் பூங்­காக்கள், சிறுவர் பொழு­து­போக்கு அமை­வி­டங்கள் நாடெங்கும் வியா­பித்­துள்­ளன.

கடந்த சுதந்­திர தினத்­தன்று நாம் பெற்ற சுதந்­தி­ரத்தைக் கொண்­டா­டு­வ­தற்­காக, பிள்­ளை­களை மகிழ்­விப்­ப­தற்­காக பெற்றோர் சிறுவர் பூங்­காக்­க­ளுக்கு தங்கள் பிள்­ளை­க­ளுடன் சென்­றி­ருந்­தனர். இவ்­வா­றான பூங்­கா­வொன்றில் சுதந்­திர தினத்­தன்று இடம்­பெற்ற அனர்த்தம் எம் அனை­வ­ரையும் துய­ரத்­துக்­குள்­ளாக்­கி­யது.

வெயாங்­கொட, நைவல மாரா­பொல சிறுவர் பூங்­காவில் இயந்­திர ஊஞ்­ச­லொன்று உடைந்து வீழ்ந்­ததில் தாயொ­ரு­வரும் அவ­ரது மக­ளொ­ரு­வரும் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்கள். சுதந்­திர தினத்­தன்று தங்­க­ளது பொழு­து­களை மகிழ்ச்­சி­யாகக் கழிப்­ப­தற்குச் சென்ற அவர்கள் மீண்டும் பெட்­டி­க­ளிலே வீட்­டுக்கு கொண்டு செல்­லப்­பட்­டனர்.

இயந்­திர ஊஞ்­சலில் ஒன்று உடைந்து வீழ்ந்­ததில் அதி­லி­ருந்த தாயும் மகளும் வீசி­யெ­றி­யப்­பட்டு அவர்­க­ளது தலைகள் இரும்புக் குழாய்கள் மீது மோதியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. குறிப்­பிட்ட அந்த ஊஞ்சல் இணைப்பு ஆபத்­தான நிலையில் இருந்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இது ஒரு அனர்த்­தமா? இன்றேல் விபத்தா? என விமர்­சிக்­க­வேண்­டி­யுள்­ளது. சிறுவர் பூங்­காக்­களை நடாத்தும் தனியார் நிறு­வ­னங்­களின் அச­மந்தப் போக்கே இதற்குக் கார­ண­மெ­னலாம். இந்த இறப்­பு­க­ளுக்கு குறிப்­பிட்ட சிறுவர் பூங்­காவில் கட­மை­யி­லி­ருந்த ஊழி­யர்­களும், உரி­மை­யா­ள­ருமே பொறுப்புக் கூற­வேண்டும்.

இவ்­வா­றான சிறுவர் பொழுது போக்­கி­ட­மான சிறுவர் பூங்­காக்கள் முழுக்க முழுக்க வர்த்­தக நோக்­க­மா­கவே நடாத்­தப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான சிறுவர் பூங்­காக்கள் அவ­சி­ய­மா­னதே. ஆனால் அங்கு வரு­ப­வர்­களின் பாது­காப்­பினை அதன் உரி­மை­யா­ளர்­களே உறு­திப்­ப­டுத்த வேண்டும்.

குறிப்­பிட்ட அனர்த்தம் இடம்­பெற்­ற­வேளை காய­முற்­ற­வர்­களை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­வ­தற்குக் கூட எந்­த வச­தி­களும் அந்த சிறுவர் பூங்­காவில் இருக்­க­வில்லை. அவ­சர முத­லு­தவி சிகிச்சை வழங்­கு­வ­தற்கு அங்­குள்ள ஊழி­யர்கள் பயிற்­று­விக்­கப்­ப­ட்டிருக்கவில்லை எனவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

நாட்டில் பல்­வேறு இடங்­களில் இவ்­வா­றான பூங்­காக்கள் இயங்­கு­கின்­றன. விசேட தினங்­களில் அங்கு பல்­வேறு பொழு­து­போக்கு சாத­னங்கள் பொருத்­தப்­ப­டு­கின்­றன.

சிறுவர் பூங்­காக்­களை எவ்­வித கண்­கா­ணிப்­பு­க­ளு­மின்றி இவ்­வாறு தன்­னிச்­சை­யாக இயங்­கு­வ­தற்கு அர­சாங்கம் ஒரு­போதும் அனு­ம­திக்­கக்­கூ­டாது. அவற்றின் தரங்கள், ஊழி­யர்­களின் பயிற்­சிகள் பரி­சீ­லிக்­கப்­பட வேண்டும். உரி­ய­த­ரத்தைப் பேணாத சிறுவர் பூங்­கா­வுக்கு சம்­பந்­தப்­பட்ட அரச நிறு­வ­னங்கள் அனு­ம­தி­வ­ழங்­கக்­கூ­டாது.

தாயும், மகளும் அனர்த்­தத்­தினால் உயிர்­விட்ட குறிப்­பிட்ட சிறுவர் பூங்­காவில் இதற்கு முன்பும் சிறு பிள்­ளை­யொன்று நீரில் மூழ்கி இறந்­துள்­ள­தாக வெயாங்­கொட பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­துள்­ள­தாக செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அண்மைய அனர்த்தம் தொடர்பான விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து சிறுவர் பூங்கா உரி­மை­யாளர் உட்­பட ஊழி­யர்கள் 6 பேர் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு 13 ஆம் திகதி (இன்று) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான பூங்காக்களை நடாத்துவதற்கு பிரதேசசபை, நகர சபை, மாநகர சபை என்பன வரி அறவிடுகின்றன. வரி அறவிடுவதுடன் மாத்திரம் அவற்றின் செயற்பாடுகள் முற்றுப் பெற்றுவிடக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, நிபந்தனைகளை மீறும் சிறுவர் பூங்காக்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யவேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.