கிரலாகல தூபியில் ஏறி புகைப்படம் எடுத்த விவகாரம்: எட்டு மாணவர்களும் விடுவிக்கப்பட்டனர்

ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா அப­ராதம் விதிப்பு இரு குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு தலா 2000 ரூபா செலுத்த உத்­தரவு

0 652

ஹொர­வ­பொத்­தான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வர­லாற்று சிறப்­பு­மிக்க கிர­லா­கல  தூபியில் ஏறி புகைப்­படம் எடுத்து அதனை பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் பதி­வேற்­றி­ய­தாகக் கூறப்­படும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் 8 பேரையும் 50 ஆயிரம் ரூபா அப­ராதம் மற்றும் தலா 2000 ரூபா அரச கட்­டணம் செலுத்­திய பின்னர் விடு­விக்க கெப்­பித்­தி­கொல்­லாவ நீதிவான் நீதி­மன்றம் நேற்று  உத்­த­ர­விட்­டது.

சந்­தேக நபர்கள் 8 பேரும் நேற்று கெப்­பித்­தி­கொல்­லாவ நீதிவான் மாலிந்த ஹர்­ஷன அல்விஸ் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­ட­போதே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. ஏற்­க­னவே கடந்த ஜன­வரி 23 ஆம் திகதி   இரவு தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் வைத்து கைது செய்­யப்­பட்ட 26 வய­தான எறா­வூரைச் சேர்ந்த ஏ.எஸ்.எம். ரினாஸ், 26 வய­தான ஓட்­ட­மா­வா­டியைச் சேர்ந்த ஏ.எம்.சப்ராஸ்,  26 வய­தான கம்­ப­ளையைச் சேர்ந்த எம்.பி.மொஹம்மட், 25 வய­தான சாய்ந்­த­ம­ரு­துவைச் சேர்ந்த எம்.ஏ.டில்சாத், 24 வய­தான குளி­யாப்­பிட்­டியைச் சேர்ந்த  பி.எம்.எம்.காமில்,  26 வய­தான ஹொர­வ­பொத்­தான பகு­தியைச் சேர்ந்த ஏ.எம்.ஹாபிஸ், 25 வய­தான புத்­த­ளத்தைச் சேர்ந்த ஹிதா­ய­துல்லா ஆகிய ஏழு பேரையும்,  கொழும்­பி­லி­ருந்து சென்று கடந்த ஜன­வரி 24 ஆம் திகதி பொலிசில் சர­ண­டைந்த மற்­றொரு மாண­வனும் நேற்று வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.  இந்­நி­லையில் நேற்று இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது,   குறித்த 8 மாண­வர்­களும் சிறை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தலை­மையில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப், ரங்க சுஜீவ மற்றும் சப்ராஸ் ஹம்சா ஆகியோர் ஆஜ­ரா­கினர். இதன்­போது நேற்று குறித்த 8 மாண­வர்­க­ளுக்கும் ஹொர­வ­பொத்­தான பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரியால் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது. மூன்று குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் இந்தக் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டது. அதில் தண்­டனை சட்டக் கோவையின் 120, 140 ஆம் அத்­தி­யா­யங்­களின் கீழ் தலா ஒவ்­வொரு குற்­றச்­சாட்டும் தொல்­பொருள் சட்­டத்தின் 31 (பீ) பிரிவின்  கீழ் மற்­றொரு குற்­றச்­சாட்டும் சுமத்­தப்­பட்­டது.

தொல்­பொ­ரு­ளியல் திணைக்­கள அதி­கா­ரிகள் கொடுத்த முறைப்­பாட்­டுக்­க­மைய இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில், தொல்­பொருள் சட்­டத்தின் கீழ் இவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அதன்­ப­டியே இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்ப­டு­வ­தா­கவும் பொலிசார் மன்­றுக்குத் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில் குறித்த 8 மாண­வர்கள் சார்­பிலும் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன், குற்றம் சாட்­டப்பட்­டுள்ள 8 பேரி­னதும் எதிர்­காலம் மற்றும் அவர்­க­ளுக்கு இதற்கு முன்னர் எந்தக் குற்­றங்­க­ளிலும் தொடர்­பில்லை என்ற நற்­சான்­றிதழ்,  குறித்த தொல்­பொருள் இடத்தில் புகைப்­படம் எடுக்கக் கூடா­தென்ற  எந்த அறி­வித்­தலும் இல்­லாமை ஆகிய கார­ணங்களை முன்­வைத்து சிறைத் தண்­டனை விதிக்க வேண்டாம் எனவும் சிறிய தண்­ட­னை­யுடன் விடு­விக்­கு­மாறும் கோரினார்.

எனினும், தொல்­பொருள் திணைக்­களம் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி, குறித்த 8 பேருக்கும் குறைந்தபட்சம் இரு வருட சிறைத் தண்­ட­னை­யேனும் வழங்க வேண்­டு­மெ­னவும், அப்­போ­துதான் இதன் பின்னர் குறித்த இடத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வதை தடுக்க முடியும் எனவும் வாதிட்டார்.

எனினும், சுமார் 45 நிமி­டங்கள் நீடித்த வாதப் பிர­தி­வா­தத்தில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன், ஏற்கனவே தீர்ப்பு வழங்­கப்­பட்ட 5 வழக்குத் தீர்ப்­புக்கள், இதற்கு முன்னர் தொல்­பொருள் இடங்­களில் பதி­வான இவ்­வா­றான சம்­ப­வங்­களில் நீதி­மன்றம் கடைப்­பி­டித்த வழி­முறை ஆகி­ய­வற்றை மன்­றுக்கு சுட்­டிக்­காட்டி, மாண­வர்­களின் எதிர்­கா­லத்தை கருத்­திற்­கொண்டு சிறைத்­தண்­டனை வேண்டாம் எனவும், குற்றம் தொடர்பில் கைவிரல் பதிவோ அல்­லது ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத் தண்­ட­னையோ கூட வேண்டாம் என்றும் வாதிட்டார்.

இதனை ஏற்­றுக்­கொண்ட நீதிவான்,  இம்­மூன்று குற்­றங்­களில் தண்­டனை சட்டக் கோவையின் கீழான குற்­றங்கள் ஒவ்­வொன்று தொடர்­பிலும் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்ட 8 பேருக்கும் தலா 1000 ரூபா வீதம் ஒவ்வொருவருக்கும் 2000 ரூபா அரச கட்­டணம் செலுத்த உத்­த­ர­விட்டார். அத்­துடன் தொல்­பொருள் சட்­டத்தின் கீழான குற்­றத்­துக்கு தலா 50 ஆயிரம் ரூபா அப­ராதம் செலுத்த உத்­த­ர­விட்டு வழக்கை நிறைவு செய்தார்.

ஹொர­வ­பொத்­தான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சேனக பீ ஜய­சிங்­கவின் ஆலோ­ச­னைப்­படி ஹொர­வ­பொத்­தான பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ரொஷான் சஞ்­ஜீவ தலை­மை­யி­லான குழு­வினர் பொலிஸ் தரப்பில் வழக்கை நெறிப்­ப­டுத்­தினர்.  கடந்த 2018  ஜனவரி 5 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஒரு தினத்தில்  கிரலாகல தொல்பொருள் வலயத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாகவும், அவர்களை தேடியபோதும் அவர்கள் யாரெனக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டில் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.