நாட்டில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத நட­வ­டிக்­கைக்கு முஸ்தீபா?

அர­சாங்­கத்தின் முன்­னெ­டுப்பு என்ன என விமல் கேள்வி

0 614

மாவ­னெல்லை மற்றும் புத்­தளம் சம்­ப­வங்­களின் மூல­மாக நாட்டில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்கும் நகர்­வுகள் முன்­னெ­டுக்­க­ப்ப­டு­கின்­றமை தெரி­கின்­றது. இதனை தடுப்­ப­தற்­கான அர­சாங்­கத்தின் முன்­னெ­டுப்­புகள் எவ்­வாறு அமைந்­தி­ருக்­கின்­றன என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விமல் வீர­வன்ச பாரா­ளு­மன்றில் கேள்வி எழுப்பினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய விமல் வீர­வன்ச எம்.பி., அண்­மையில் மாவ­னெல்லை சிலை உடைப்பு சம்­பவம் குறித்து அப்­ப­கு­தியில் இரண்டு முஸ்லிம் இளை­ஞர்கள்  தேடப்படும் நிலையில் அவர்­களின் தந்­தையின் வீட்டில் ஆயு­தங்கள் மற்றும் ஏனைய சாத­னங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு முன்னர் புத்­தளம் பகு­தியில் ஒரு காணியில்  ஆயு­தங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன. இந்த செயற்­பா­டுகள் சில சர்­வ­தேச  நாடு­களின், சர்­வ­தேச அமைப்­பு­களின் ஆத­ர­வுடன் இந்த நாட்டில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்கும் நகர்­வுகள் முன்­னெ­டுக்­க­ப்ப­டு­கின்­றமை இதன் மூல­மாகத் தெரி­கின்­றது. இது மிகவும் மோச­மான செயற்­பா­டாகும். இந்த சம்­ப­வங்கள் குறித்து அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் விசா­ரணை தக­வல்­களை சபைக்கு அறி­யத்­தர வேண்டும். இந்த நாட்டில் பெரும்­பா­லான முஸ்லிம் மக்கள் அமை­தி­யாக வாழ விரும்­பு­கின்­றனர். அவ்­வா­றி­ருக்­கையில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் அவர்­க­ளையே பாதிக்கும் வகையில் அமையும், ஆகவே அர­சாங்கம் இது­கு­றித்து எமக்கு அறி­யத்­தர வேண்டும் என்றார். இதற்கு பதி­ல­ளித்த சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்ல:- முறை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த கார­ணத்­தினால் தான் உண்­மைகள் வெளி­வந்­துள்­ளன. விமல் வீர­வன்­சவின் கேள்­வி­யி­லேயே எமது விசா­ர­ணைகள் சரி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது எனக் குறிப்­பிட்டார்.

இதன்­போது மீண்டும் ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய விமல் வீர­வன்ச எம்.பி:- விசா­ர­ணைகள் சரி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றதா என்­பதை எம்மால் கூற முடி­யாது, எனினும் பொலிஸ் இது­கு­றித்து கூறும் கார­ணி­களை விடவும் மோச­மான தன்­மைகள் இன்று நில­வு­வ­தாக எமக்கு அறிய முடி­கின்­றது. ஆகவே, விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன என்ற கார­ணத்தை கூறி மழுப்­பாது இதன் ஆரம்பம் என்ன, யார் உள்­ளனர் என்ற கார­ணி­களை கண்டறியுங்கள். கிழக்கிலுள்ள ஒரு அரசியல்வாதியின் தலையீட்டினால் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகின்றது. ஆகவே இந்த பிரச்சினை குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.