பாதாள உலக கோஷ்டிகளை ஒழிக்க இராணுவத்தினரை பயன்படுத்துவோம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன்

0 507

நாட்டில் இடம்­பெறும் மனித படு­கொ­லை­க­ளுக்கு பாதாள உலக கோஷ்­டி­களே காரணம். கொலை­களை  தடுக்க பொலி­சாரின் செயற்­பா­டு­க­ளுக்கு இரா­ணுவ ஒத்­து­ழைப்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கவும் தாம் தயா­ராக இருப்­ப­தாக பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார்.

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் நேற்று கண்டி அஸ்­கி­ரிய, மல்­வத்து தேரர்­களை சந்­தித்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே இதனைக் குறிப்­பிட்டார்.  இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்.

நாட்டில் இப்­போது இடம்­பெற்­று­வ­ரு­கின்ற குற்­றங்கள் மற்றும் கொலை­களை தடுக்க அர­சாங்­க­மாக நாம் இப்­போது சில மாற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். குறிப்­பாக இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாது­காப்பு படை­களின்  உத­வி­யுடன் முக்­கி­ய­மான சில வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்கும் அப்பால் மனித படு­கொ­லை­களை தடுக்­கவும், பாரிய குற்­றங்­களை தடுக்­கவும் இரா­ணு­வத்தின் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்கி செயற்­ப­டவும் நாம் அங்­கீ­காரம் கொடுத்­துள்ளோம். பொலி­சா­ருக்கு இரா­ணு­வத்தின் ஒத்­து­ழைப்பு வேண்டும் என்றால் உட­ன­டி­யாக இரா­ணு­வத்தின் ஒத்­து­ழைப்­பு­களை பெற்­றுக்­கொள்ள முடியும்.

குறிப்­பாக, பாதாள உலக கோஷ்­டி­களின் செயற்­பா­டு­கள்தான் இந்தப் படு­கொ­லை­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளன. சட்­ட­வி­ரோத ஆயுதக் குழுக்கள் மோதலில் பொது­மக்கள் கொல்­லப்­ப­டு­கின்­றனர். ஆகவே பாதாள உலக கோஷ்­டி­களின் செயற்­பா­டு­களை தடுக்க வேண்டும். பாதாள உலக கோஷ்­டி­களை கட்­டு­ப்ப­டுத்த நாம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். இப்­போதும் இர­க­சிய வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

விசே­ட­மாக பொலி­சாரே இப்­போது அந்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எனினும் ஒரு­நாளில் அல்­லது ஒரு மாதத்தில் இவற்றை முடி­வுக்கு கொண்­டு­வர முடி­யாது.  ஆகவே இவற்றை கட்­டுப்­ப­டுத்த சிறிது காலம் தேவைப்­ப­டு­கின்­றது. எனினும் விரைவில் நாட்டில் அமை­தி­யான சூழல் ஒன்­றினை உரு­வாக்க முடியும். அதற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

கடந்த காலங்­களில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்னர் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் புலி­களின் ஆயு­தங்கள் இன்று பாதாள உலக கோஷ்­டி­களின் கைக­ளுக்கு வந்­துள்­ளன. இந்தப் பிரச்­சி­னையே எம்மை அதிகம் பாதித்­துள்­ளது. ஆகவே இவற்றை ஆரா­யவும் கட்­டுப்­ப­டுத்­தவும் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் வேலைத்திட்டம் ஒன்றினை முன்வைத்துள்ளார். அத்துடன் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உதவியுடன் வேறு சில வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.