நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் என்னை சிறையில் அடை­யுங்கள்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா சவால்

0 677
  • பாரா­ளு­மன்ற செய்­தி­யா­ளர்கள்

தான் தேர்­தலில் தோற்­றி­ருந்தால் தன்னை ஆறடி நிலத்தின் கீழ் புதைத்­தி­ருப்பார் என மஹிந்த ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்­திய ஜனா­தி­பதி, இன்று அவ­ரையே பிர­த­ம­ராக்­கி­விட்டு ஆட்சிக்கு கொண்டு­வந்த எம்மை கொலை­கா­ரர்கள், சூழ்ச்­சிக்­கா­ரர்கள் என குற்றம் சுமத்­து­கின்றார். நான் கொலை செய்ய சூழ்ச்சி செய்தேன் என்றால் ஆதா­ரத்தை நிரூ­பித்து என்னை சிறையில் அடை­யுங்கள் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பினர் ஆசு மார­சிங்க கொண்­டு­வந்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யின்­போது கருத்து தெரி­விக்­கையில் அவர் இந்தக் கருத்­தினை கூறினார்.

அவர் மேலும் கூறு­கையில், நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கொலை செய்யத் திட்டம் போட்­ட­தாக ஜனா­தி­பதி கூறி­ய­தாக ஆங்­கில செய்­தித்தாள் ஒன்றில் அவ­தா­னித்தேன். நாமல் குமார என்ற நபர் புல­னாய்வு அதி­கா­ரி­யாக ஜனா­தி­ப­திக்கு தகவல் கொடுப்­பவர். அதேபோல் சில நாட்­க­ளுக்கு முன்னர் சர்­வ­தேச ஊட­கங்­களை சந்­தித்த ஜனா­தி­பதி, அந்த சந்­திப்­பின்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையோ சரத் பொன்­சே­கா­வையோ பிர­த­ம­ராக நிய­மிக்க மாட்டேன் என கூறினார். காரணம் கேட்­ட­மைக்கு நான் அவரை கொலை­செய்ய திட்டம் தீட்­டி­ய­தாக தகவல் கிடைத்­த­தாகக் கூறினார்.

உண்­மையில் நான் பிர­த­ம­ராக வேண்டும் என்ற எந்த நோக்­கத்­திலும் இருக்­க­வில்லை. கன­வில்­கூட நான் அவ்­வாறு எண்­ணிப்­பார்த்­த­தில்லை. அதேபோல் நான் ஜனா­தி­ப­தியை கொல்ல முயற்சி செய்­த­தாக அவர் காரணம் கூறு­கின்றார். நான் அவ்­வாறு கொலை முயற்­சியில் ஈடு­பட்டேன் என்­ப­தற்கு என்ன ஆதாரம் உள்­ளது. இந்தக் கருத்து மிகவும் மோச­மா­னது. ஆகவே ஜனா­தி­ப­தியின் இந்தக் கருத்து குறித்து நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். உட­ன­டி­யாக பொலிஸ்மா அதி­ப­ரிடம் இந்தக் கார­ணிகள் குறித்து வினவ வேண்டும். அவரை அடுத்த 48 மணி நேரத்­துக்குள் பாரா­ளு­மன்­றத்­துக்கு வர­வ­ழைத்து உண்­மை­களை வினவ வேண்டும். அவ்­வாறு நான் கொலை சூழ்ச்­சியில் ஈடு­பட்டுள்ளேன் என்றால் என்னை கைது செய்து சிறையில் அடை­யுங்கள். குற்­ற­வாளி என்றால் நான் பாரா­ளு­மன்­றத்தில் இருப்­ப­தற்குத் தகு­தி­யில்லை. ஜனா­தி­ப­தியின் இந்த கருத்து மிகவும் பாரதூ­ர­மா­னது. அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆரம்­பத்தில் கூறிய கருத்­துக்­களை அவ­தா­னிக்க வேண்டும். தான் ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­றி­ருந்தால் என்னை ஆறடி நிலத்தின் கீழ் மஹிந்த ராஜபக் ஷ புதைத்­தி­ருப்பார் என அவர் பல சந்­தர்ப்­பங்­களில் கூறினார். அவ்­வறு தன்னை நிலத்தில் புதைத்­தி­ருப்பார் என கூறி­ய­வரை பிர­த­ம­ரா­க்கிவிட்டார். தன்னை கொலை செய்ய திட்டம் தீட்­டி­ய­தாகக் கூறு­கின்றார். மேலும் நாமல் குமார எவ்­வாறு புல­னாய்வு அதி­கா­ரி­யானார்? அவர் ஜனா­தி­ப­திக்கு புல­னாய்வு அதி­கா­ரி­யாக உள்ளார். அதே நிலையில் தாமரை மொட்டில் தேர்தலில் களமிறங்கவும் போகின்றார். ஆகவே இவர்களின் கூட்டணி மீது எமக்கு சந்தேகமுள்ளது. கொலையாளி என என்னை கூறியது தவறு. ஆகவே உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.