தாங்க முடியா கடன் சுமை

0 781
  • இஸ்ஸத் அபூ ஷப்கீ

கடந்த வருடம் பாரா­ளு­மன்­றத்தில்  வரவு செலவுத் திட்ட முன் மொழி­வுகள்  சமர்ப்­பிக்­கப்­பட்­ட­போது, இலங்கை எதிர்­வரும் மூன்­றாண்­டு­க­ளுக்கு  மீள் செலுத்­த­வேண்­டிய கடன்­களின் தொகை மிக அதி­க­மாக இருப்­ப­தாக நிதி அமைச்சர் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் 2018ஆம் ஆண்டு நாடு மீளச் செலுத்த வேண்­டிய மூல­தனக் கடன்கள் குறை­வா­கவே காணப்­பட்­டன. ஏனெனில், இவ்­வ­ருடம் இலங்­கைக்­கான 2.5 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான  அபி­வி­ருத்திக் கடன் முறிகள் முதிர்ச்­சி­ய­டை­கின்­றன. இதை­வி­டவும் பெறப்­பட்ட கடன்­க­ளுக்­கான வட்­டியும் 600 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ராகக் கணக்­கி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்த மீள் செலுத்­த­வேண்­டிய முழுத் தொகை­களை இவ்­வாண்டில் பெறப்­படத் திட்­ட­மிட்­டுள்ள 3 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான அபி­வி­ருத்திக் கடன் முறிகள் மூல­மாக அவற்றை ஈடு­செய்ய அரசால் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அப்­ப­டி­யாயின் 2018ஆம் ஆண்­டை­விட 2019ஆம் ஆண்டு பார­தூ­ர­மான கடன்­பளு கூடிய ஆண்­டாக இருக்­கப்­போ­கி­றது என்­பது யதார்த்­த­மாகும்.  அதா­வது, 2018இல் 2.5 பில்­லியன்  அமெ­ரிக்க டொலர் மீள்­செ­லுத்த வேண்­டி­ய­தா­னதும் சேர்த்து 2019இல் 4.2 பில்­லியன் அமெ­ரிக்க டொல­ராக  கடன்­தொகை உயர்ந்­துள்­ளது. அடுத்து இதே போன்­ற­தொரு தொகையை 2022ஆம் ஆண்­டிற்குப் பின்பு  செலுத்த வேண்­டி­யு­முள்­ளது. ஆனாலும் 2020 முதல் 2022 வரை­யுள்ள ஒவ்­வொரு வரு­டமும் 3.6 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் கடன்­தொகை  மீள்­செ­லுத்த வேண்­டி­யு­முள்­ளது. அத­னால்தான் 2018 ஆம் ஆண்டே மீள் செலுத்­துகைக் கடன் குறைந்த வரு­ட­மாக கணிக்­கப்­பட்­டது.

அதனால் நிகழ் ஆண்டில் வர­வி­ருக்கும் 2019 ஆம் ஆண்­டுக்­கு­ரிய கடன் சுமை­களை மீள­ளிப்பு செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை திட்­ட­மிட்டுத் தயார் செய்­ய­வேண்­டிய பொறுப்பு ஆட்­சி­யா­ளர்கள் மீது சுமத்­தப்­பட்­டிக்­கி­றது. இதனைக் கருத்­திற்­கொண்டு பெற்ற கடனைச் செலுத்த மேலும் கடன் பெறு­வதைத் தவிர்ப்­ப­தற்கும் சென்­மதி நிலுவைப் பற்­றாக்­கு­றையைத் தீர்ப்­ப­தற்கும் முறை­யாகத் திட்­ட­மிட்டு வினைத்­தி­ற­னுடன் நல்­லாட்­சி­ய­ரசு  செயற்­பட்­டி­ருக்க வேண்டும்.

ஆனால், நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள ஸ்திர­மற்ற, நிலை­யற்ற தன்­மையும் நாண­யப்­பெ­று­ம­தியின் வீழ்ச்­சியும் தொடர் வேலை­நி­றுத்­தங்கள் மற்றும் போராட்­டங்­களால் பாதிக்­கப்­பட்டு வினைத்­தி­றனை இழந்­துள்­ளதன் கார­ண­மாக 2018ஆம்  ஆண்­டிற்­கான மீள­ளிக்­க­வேண்­டிய கடன் தொகை­யையும் முழு­மை­யாக செலுத்த முடி­யாமல் அர­சாங்கம் திற­னி­ழந்து நிற்­கி­றது.  இதன் கார­ண­மாக 2019ஆம் ஆண்டு மீள­ளிக்க வேண்­டிய கடன் தொகை இமா­லய அளவு உயர்ந்து காட்­சி­ய­ளிக்­கி­றது.

அதனால் வேறு வழி­யே­யின்றி பொது­மக்­களின் வாழ்­வுக்­கான வரு­மா­னத்தில் கைவைக்கும் வரி­க­ளா­கவும் செல­வி­னங்­களை அதி­க­ரிக்கச் செய்யும் வரி­க­ளா­க­வுமே பற்­றாக்­கு­றையை நிவர்த்­திக்கப் பொருத்­த­மான வழி­யாக இந்த வரி விதிப்­பு­களை ஆட்­சித்­த­லை­மைகள் தெரிவு செய்­துள்­ளன.  இந் நிலையைக் கருத்­திற்­கொண்­டுதான் கடந்த வாரத்­திற்கு முன் அரச வரு­மா­னத்தை அதி­க­ரித்துக்  கொள்ளும் வகையில் திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட புதிய நிதிச் சட்­டத்தை பாரா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்­திற்­காக சமர்ப்­பித்­துள்­ளனர்.

இப்­பு­திய வரிகள் சென்ற வருட வரவு செலவுத் திட்­டத்தில் முன்­மொ­ழி­யப்­பட்ட நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­த­வை­யாகும். இவை­களில் சில மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி வரு­மா­னத்தை ஈட்டிக் கொள்ள சமர்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன், மேலும் சில புதிய வரி­க­ளுக்­கு­மான அங்­கீ­கா­ரத்­தையும் கோரி­யுள்­ளனர். அதே­போல கடந்த வரவு செலவுத் திட்­டத்தில் நிதி நிறு­வ­னங்­களின் மீது அறி­மு­கப்­ப­டுத்­திய கடனை மீளச்­செ­லுத்தும் வரியை நடை­மு­றைப்­ப­டுத்தி அவற்றை வசூ­லிக்கும் இந்தத் திட்­டத்­தையும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் கார­ண­மாக அனைத்து தொலை­பேசி சேவை நிறு­வ­னங்­களும் தமது எதிர்ப்பை தெரி­வித்­துள்­ளன. ஆனாலும் அதி­க­ரித்துச் செல்லும் கடன் சுமையை சீர்­செய்யும் நோக்கில் அர­சாங்கம் மீளவும் வரியை அமுல்­ந­டத்த அனு­மதி கோரி­யுள்­ளது. அதனால் எதிர்­வரும் ஆண்டில் மக்­களின் தொலை­பேசிக் கட்­ட­ணங்­களில் நிச்­சயம்  தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக அமை­ய­வு­முள்­ளது.

இவற்றை விடவும் வாக­னங்­க­ளுக்கும் புது­வ­கை­யான வரி­களை விதிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அந்த வகையில் டீசலில் இயங்கும் 2300 சீசீ இயந்­திர வலுக்கு மேல் சக்­தி­கொண்ட மற்றும் 1800 சீசீ க்கு மேல் வலு கொண்ட பெற்­றோலில் இயங்கும் வாக­னங்­க­ளுக்கும் பட்­ட­ரியில் இயங்கும் வாக­னங்கள் 200கே.டபிள்யூ க்குமேற்­பட்ட வாக­னங்­க­ளுக்கும் ஆடம்­பர வரி விதிப்­புக்­கான முன்­மொ­ழி­வு­களை நாடா­ளு­மன்றில் சமர்ப்­பித்­துள்­ளது. இவ்­வ­ரி­யா­னது அரச சேவை­க­ளுக்­கா­க­வென இறக்­கு­மதி செய்­யப்­படும் வாக­னங்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தாக மாட்­டாது எனவும் குறிப்­பி­டப்­ப­ட­டுள்­ளது.

இத­னை­வி­டவும் மேல­தி­க­மாக உரிம வரி மற்றும் காபன்­வரி எனவும் வாக­னங்­க­ளுக்கு அற­விடத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. உரிம வரி­யா­னது வாக­னத்தைக் கொள்­வ­னவு செய்த வரு­டத்­தி­லி­ருந்தே  அற­வி­டப்­படும். அத்­துடன் இவ்­வ­ரியை வரு­டா­வ­ருடம் செலுத்­து­வ­துடன் அவ்­வா­க­னத்­திற்­கான காபன் வரியை கொள்­வ­னவு செய்த வரு­டத்­தி­லி­ருந்து ஒரு வருடம் கழித்து பின் வரு­டா­வ­ருடம் செலுத்தக் கூடி­ய­தாக அமை­ய­வி­ருக்­கி­றது.

அதே­போ­லவே கடந்த (2017) வரவு செல­வுத்­திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த நிறு­வ­னங்­களின் பதி­வுக்­கட்­ட­ணங்கள் திட்­டத்தை 2019ஆம் வருடம் முதல் அற­வி­டு­வ­தற்­கான முன் மொழி­வு­களும் அங்­கீ­கா­ரத்­திற்­காக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் அடிப்­ப­டை­யில்தான் பொதுக் கம்­ப­னிகள் வரு­டாந்தம் பதிவுக் கட்­டணம் செலுத்த வேண்­டி­யு­முள்­ளன.  இவ்­வ­கை­யான வரிகள் அனைத்­துமே எதிர்­வ­ர­வி­ருக்கும் வரு­டத்­திற்­கான வரவு செலவுத் திட்­டத்­திற்கு முன்­ன­ரா­கவே அர­சினால் அமுல்­ந­டத்த எதிர்­பார்க்­கப்­ப­டு­ப­வை­க­ளா­கும்.

இப்­ப­டி­யான சூழ்­நி­லையில் ஆட்­சி­யா­ளர்கள் இப்­பா­ரிய கடன் பளு­வி­லி­ருந்து நாட்டை எப்­படி மீட்கப் போகி­றார்கள்? என்­பதே இப்­போது நாட்டு மக்­க­ளிடம் மீளெ­ழுந்­துள்ள கேள்­வி­யாகும். ஆட்சிப் பொறுப்­பெ­டுத்த 2015 முதல் இன்­று­வரை அரச தலை­வர்­களால் மேடை­க­ளிலும் ஊடக கருத்­த­ரங்­கு­க­ளிலும் நேர்­கா­ணலின் போதும் வெளிப்­ப­டுத்­தி­வரும் முக்­கிய தக­வ­லாக வெளி­வ­ரு­வது முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­ ஷவின் ஊழல் மோச­டி­யி­னாலும் பிழை­யான அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளி­னாலும் பாரிய கடன் சுமை­க­ளுக்கு நாடு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளதால் அக்­க­டன்­களை செலுத்­து­வ­தற்­கா­கவே இவ்­வ­ரி­வி­திப்­புகள் நடை­மு­றைப்­ப­டுத்த  வேண்­டி­யுள்­ளதாக் கூறி வரு­கின்­றனர் அதில் உண்மை இல்­லா­ம­லு­மில்லை.

ஆனாலும், மூன்று தசாப்­த­கால யுத்த முடி­வுக்­கான செல­வுகள், அதன் பின்­ன­ரான பாரிய நாட­ளா­விய ரீதி­யி­லான வீதி அபி­வி­ருத்­திகள் புன­ர­மைப்­புகள், 55,000 வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஒரே தினத்­தி­லான அரச நிய­ம­னங்கள் வழங்­கியமை, வறு­மைக்­குட்­பட்ட மக்­க­ளுக்­கான  சமுர்த்திக் கொடுப்­ப­ன­வுகள், விவ­சா­யி­க­ளுக்­கான உர மானி­யங்கள் இவைகள் போன்ற பல பாரிய மக்கள் வாழ்­வா­தார சமூக நலத்­திட்­ட­களும் மகிந்த  ராஜ­பக் ஷ அரசால் மேற் கொள்­ளப்­பட்­டன. இதற்­கான பெரும் தொகைக்­க­டன்கள் மீ­ள­ளிக்­கப்­ப­ட­வில்லை. எனினும்  இவ்­வ­னைத்து வேலைத்­திட்­டங்­களும் நாட்டு மக்­க­ளிடம் முறை­யாகச் சென்­ற­டைந்­துள்­ளன. அதன் கார­ண­மாக பாரிய கடன் பளுவைப் பற்­றியோ  நிரூ­பிக்­கப்­ப­டாத ஊழல் மோச­டிகள் பற்­றியோ மக்கள் பொருட்­ப­டுத்­த­வில்லை என்­பது புல­னா­கி­றது. அதன்  பிர­தி­ப­லிப்பு மகிந்த ராஜ­பக்­ ஷ­வுக்கு கடந்த மூன்று வரு­ட­கால  ஆட்சி அதி­கா­ர­மில்­லாத இடை­வெளிச்  சூழ­லிலும் பெரும்­பான்­மை­யின மக்­களின் மனோ­நிலை எப்­படி இருந்­த­தென மதிப்­பீடு செய்ய  இவ்­வ­ருடம் பெப்­ர­வரி 10இல் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களில் வெளி­யாக்கிக் காட்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளன. அந்த வெற்றி அவ­ரது தனி ஆளு­மைக்கும் சேவை­க­ளுக்கும் அவர் சார்பு மொட்டுக் கட­சிக்குக்  கிடைத்த பெறு பேறா­கவே மக்கள் கரு­துவ­த­னா­லே­யாகும்.  ஆனாலும்  அவ­ரது ஆட்­சியில் நாட்டின் சிறு­பான்மை இனங்­களின் அபி­லா­ஷை­க­ளையும் உரி­மை­க­ளையும் மதித்து உரிய தீர்­வு­களை வழங்கத் தவ­றி­யதன் கார­ண­மா­கவும் நாட்­டுக்கே விசு­வா­ச­மா­யுள்ள முஸ்­லி­ம்க­ளுக்கே இன­வா­தி­களால் ஏற்­ப­டுத்­திய அழி­வு­க­ளுக்கு முடி­வு­காணத் தவ­றி­ய­த­னாலும் அவரின் அரச ஆட்­சி­ய­தி­காரம் கைமாறக் கார­ண­மா­னது.

ஆனால், இப்­போது நல்­லாட்­சி­யிலும் முன்­னைய ஆட்­சி­கால கட்­டுப்­பா­டில்­லாத இன­வாத செயல்கள்,  சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்­கெ­தி­ரான  தீவிர இன­வாத மத­வாத எதிர்ப்­ப­லைகள் சற்றுத் தணிந்­தி­ருந்­த­ போ­திலும் இருப்­புக்கும் வாழ்­வா­தா­ரத்­திற்கும் உத்­த­ர­வா­த­மில்­லாத நிலை நல்­லாட்­சி­யிலும் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக முஸ்­லிம்­களின் இருப்­புக்கும் வாழ்­வுக்கும் ஆதா­ர­மான காணிகள் உரித்­தாக்­கப்­ப­டாது பறிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. வாழ்க்­கைக்­கான வரு­மான வழி­களின் பாது­காப்பு உறு­தி­ய­ளிக்­கப்­ப­டாது அழிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இந்­நி­லையில் வாழ்க்கைச் செல­வி­னங்கள் வரம்­புக்­கப்பால் நீண்டு செல்­கி­றது. அதற்­கப்பால்  நிரூ­பிக்­கப்­பட்ட மத்­திய வங்கி ஊழல் மோசடி  கார­ண­மாக நாட்டின்  இருப்புப் பொரு­ளா­தா­ரத்தில் குறை­வேற்­பட்­டதும்  நாட்டு மக்கள் மனதில் ஆழப் பதி­யப்­பட்­டு­விட்­டது.

இது தவிர வர­லாறு காணாத பாரிய வீழ்ச்சி ரூபாவின் பெறு­ம­திக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் நாட்டின் பண­வீக்­கமும் அதி­க­ரித்தே காணப்­ப­டு­கி­றது.  பொரு­ளா­தா­ரத்தின் அடிப்­படைப் பண­வீக்­கத்­தினைப் பிர­தி­ப­லிக்­கின்ற தொகை­ம­திப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும்  தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு மாத அடிப்படையில் 2018 ஜூன் மாதத்தில் 1.8 சத வீதத்திலிருந்து ஜூலை மாதம் 2.3 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது.

இப்படியான வரிச்சுமைகள் கூடிய நிகழ் காலத்தைப் பற்றியும் கடன் பளுக்கூடியதாகவுள்ள வரும் ஆண்டைப் பற்றியும்  குறித்துகூற முடியாத அபிவிருத்தியே இல்லாத சூழ்நிலை பற்றியும் தொழிலற்ற பட்டதாரிகளுக்கும் இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வழங்க நல்லாட்சியால் தற்போது முடியாதுள்ளதென நிதியமைச்சரே பகிரங்கமாகக் கூறியுள்ள நிலையிலும் தொழிற் சங்கப் போராட்டங்களை நீதியாக அணுகி தீர்வு காணப்படாமலும் ஆட்சியைப் பொறுப்பெடுத்த போது நாட்டு மக்களுக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு  அளிக்கப்பட்ட  வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலும் மீதியாயுள்ள இடைவெளிக் காலத்திலும் இவைகளுக்குத் தீர்வின்றி நல்லாட்சி பயணிக்குமானால் அதன் பிரதிபலனை மக்கள் வழங்க எப்போதும் தயார் நிலையிலேயே உள்ளனர் என்பதனை முன்னோக்கி வரும்  தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியேயாகும் என்பதை யாரும் குறைத்து மதிப்பீடு செய்யமுடியாது என்பதே யதார்த்தமாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.