சிரிய கிளர்ச்சிக்காரர்களால் நான்கு வயதுச் சிறுமி தாயிடம் ஒப்படைப்பு

0 655

தந்தை இறந்­து­விட்­டதால் நான்கு வயதுச் சிறு­மியின் பரா­ம­ரிப்பு தொடர்பில் எழுந்த முரண்­பாட்­டை­ய­டுத்து சிரியக் கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் இறுதிக் கட்­டுப்­பாட்டுப் பிர­தே­ச­மான இட்­லிப்­பி­லுள்ள நிர்­வாகம் அச்சிறு­மியை அவ­ரது பெல்­ஜிய நாட்டைச் சேர்ந்த தாயிடம் கடந்த திங்­கட்­கி­ழமை ஒப்­ப­டைத்­தது.

இளம் சிவப்பு நிற மேலங்­கி­யொன்றை அணிந்­து­கொண்டு கையில் கரடி பொம்மை பரி­சி­னையும் சுமந்­த­வாறு துருக்­கிய எல்­லை­யி­லுள்ள தனது தாயை சந்­திப்­ப­தற்­காக அழைத்து வரப்­ப­டு­வதை ஏ.எப்.பி. ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் நேரில் கண்­டுள்ளார்.

இந்தக் கைய­ளிப்பு சிரி­யாவின் முன்னாள் அல்-­–கை­தா­வுடன் தொடர்­பு­பட்ட கிளர்ச்­சிக்­கா­ரர்­களால் வழி­ந­டத்­தப்­படும் சக்­தி­வாய்­நத ஹயாத் தஹ்ரீர் அல்–-ஷாம் அமைப்பின் சிவில் கிளை­யி­னரால் மேற்­பார்வை செய்­யப்­பட்­டது.

யஸ்மின் நேற்று அவ­ரது பெல்­ஜிய நாட்டு தாயா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். இங்­குள்ள அவ­ரது பாது­கா­வ­லர்கள் மற்றும் அவ­ரது தாயா­ருக்கும் இடை­யே­யான முரண்­பாடு தீர்க்­கப்­பட்­ட­தை­ய­டுத்து இவ்­வொப்­ப­டைப்பு இடம்­பெ­று­கின்­றது என நிர்­வா­கத்தின் தலைமை அதி­காரி பவாஸ் ஹிலால் தெரி­வித்தார்.

துருக்­கி­யி­லி­ருக்கும் அவ­ரது தாயா­ரிடம் சிறு­மியை கைய­ளிக்­கு­மாறு துருக்கி தரப்­பி­லி­ருந்து எம்­முடன் தொடர்பு கொள்­ளப்­பட்­டது எனவும் அவர் தெரி­வித்தார்.

குறித்த தாய், தனது மகள் அவ­ரது தந்­தையின் இறப்பின் பின்னர் தன்­னா­லேயே பாரா­ம­ரிக்­கப்­பட வேண்­டு­மென முறை­யீடு செய்­தி­ருந்தார் என கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் நிரு­வாகப் பிரிவின் மற்­று­மொரு உறுப்­பி­ன­ரான இப்­ராஹிம் ஷாஷோ தெரி­வித்தார்.

சிறு­மியின் தந்­தையின் மர­ணத்தைத் தொடர்ந்து அவ­ரது நண்­பர்­களால் யஸ்மின் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்தார் எனத் தெரி­வித்த ஷாஷோ, அந்த நண்­பர்கள் யார் என்ற விப­ரங்­களை வெளி­யி­ட­வில்லை.

நீதித்­துறை, குறித்த வழக்கு தொடர்பில் ஆராய்ந்­தது. பின்னர் அந்தத் தாயின் பக்­கமே நியாயம் இருப்­பதைக் கண்­ட­றிந்­த­தென சிறு­மியை புகைப்­படம் எடுப்­ப­தற்­காக ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிற்கு அகன்ற கண்­க­ளை­யு­டைய அச்­சி­று­மி­யினை அழைத்­து­வந்த தாடி­வைத்த நபர் தெரி­வித்தார்.

சிறு­மியின் தந்தை ஒரு போரா­ளியா என்­பது தொடர்­பிலோ அல்லது அவர் எந்தப் பிரிவில் இருந்தார் என்பது தொடர்பிலோ எவ்வித கருத்துக்களையும் அதிகாரிகள் வெளியிட வில்லை. இது தொடர்பில் பல்கேரிய அல்லது துருக்கிய அதிகாரிகள் எவ்வித உறுதிப்படுத்தல்களையும் வெளியிடவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.