சந்திரிகா சுதந்திர கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்

அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

0 809

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து சிலரை பிரித்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைக்க முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க முயற்­சித்து வரு­கின்றார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்த சர்­வ­தேச சக்­தி­களும் முயற்­சித்து வரு­கின்­றன என அக்­கட்­சியின் உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். சந்­தி­ரிகா குமா­ர­துங்க இனி ஒரு­போதும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இணைய முடி­யாது. அவர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­கி­விட்டார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் பிள­வுகள், மாற்று அணிகள்  உரு­வாகி வரு­வ­தாக கருத்­துக்கள் பர­வ­லாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அவர் இவ்­வா­றான கருத்­தினை முன்­வைத்­துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒரு­போதும் இணைந்து செயற்­பட முடி­யாது. அதன் கார­ண­மா­கவே நாம் உரிய நேரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான கூட்­ட­ணியை உடைத்­துக்­கொண்டு எமது தனி அர­சாங்­கத்தை அமைத்தோம். மக்­களும் அவ்­வா­றான ஆட்­சியை அமைக்க வேண்­டு­மென்ற கோரிக்­கை­யையே விடுத்­தனர். ஆகவே ஜனா­தி­பதி உரிய நேரத்தில் சரி­யான தீர்­மானம் எடுத்தார்.

மேலும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஒரு­போதும் ஆட்­சி­ய­மைக்க இட­ம­ளிக்க போவ­தில்லை என ஜனா­தி­பதி உறு­தி­யாகக் கூறி வரு­கின்றார். இந்த நிலை­மைக்கு கடந்த காலத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி செய்த மோச­டி­களே கார­ண­மாகும்.

அதேபோல் இப்­போதும் எமது ஆட்­சியை கொண்டு நடத்­த­வி­டாது ஐக­்­கிய தேசியக் கட்சி குழப்பி வரு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தை தமது ஆதிக்­கத்தின் கீழ் வைத்­து­க்கொண்டு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பியை கைக்குள் வைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியும் சபா­நா­ய­கரும் தமக்கு ஏற்­றால்போல் செயற்­பட்டு வரு­கின்­றனர். ஜன­நா­யகம் பேசும் நபர்­களே பாரா­ளு­மன்­றத்தை தமது கட்­டு­ப்பாட்டின் கீழ் வைத்­துக்­கொண்டு நாட்­டினை மோச­மாக வழி­ந­டத்தி வரு­கின்­றனர்.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து ஒரு சிலரை பிள­வு­ப­டுத்தி ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைக்கும் மிகப்­பெ­ரிய சூழ்ச்சியொன்று இடம்­பெற்று வரு­கின்­றது. இந்த சூழ்ச்­சி­யினை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவே முன்­னெ­டுத்து வரு­கின்றார்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் அவர் செய்த சூழ்ச்­சியை இம்­மு­றையும் செய்ய முயற்­சித்து வரு­கின்றார். இதற்கு சர்­வ­தேச சக்­தி­களின் தலை­யீ­டு­களும் உள்­ளன.  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கொள்­கையில் இன்று அவர்கள் எவரும் இல்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களாக மாறிவிட்டனர். இதனை மக்கள் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அவருக்கான இடம் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.