குற்றங்களை மறைக்கவா இந்த நாடகங்கள்?

0 854

 

ஆட்சி மாற்ற நட­வ­டிக்­கை­யா­னது ஒரு­புறம் நாட்­டுக்கு பெரும் நெருக்­க­டி­யையும் பொரு­ளா­தார பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்ற நிலையில், மறு­புறம் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் தமது குறை­களை மறைப்­ப­தற்­கான சந்­தர்ப்­ப­மாக இதனைப் பயன்­ப­டுத்­து­வதும் மிக ஆபத்­தா­ன­தாகும். இது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் கவ­னிக்­கத்­தக்­க­வை­யாகும்.

நாட்டின் ஜன­நா­ய­கத்தை ஒட்­டு­மொத்­த­மாக அழித்த தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க என்றும்  சிங்­கப்பூர் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் போதும், ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை விற்கும் போதும் ரணில் விக்­ர­ம­சிங்க ஏன் ஜன­நா­ய­கத்தைப் பாது­காக்க முன்­வ­ர­வில்லை எனவும் அநு­ர­கு­மார திசா­நா­யக்க கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

ரணில் விக்­ர­ம­சிங்க ஜன­நா­ய­கத்தின் போலி காவ­லாளி எனத் தெரி­வித்த அநு­ர­கு­மார, மூன்­றரை வருட மோச­மான வர­லாற்றை மூடி மறைக்கும் முயற்­சி­களில் ரணில் ஈடு­பட்­ட­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார். இதே­வேளை, ராஜ­பக்ச குடும்­பத்­திற்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் காணப்­படும் வழக்கு தொடர்­பிலும் அவர் முக்­கிய விப­ரங்­களைச் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

” இந்த மாத நடுப்­ப­கு­தியில் இருந்து பெப்­ர­வரி வரை­யி­லான 3 மாத காலப்­ப­கு­திக்குள் அதி­க­ள­வி­லான வழக்­குகள் விசா­ர­ணைக்கு வர­வுள்­ளன. பசி­லுக்கு எதி­ராக இரண்டு வழக்­குகள் வர­வுள்­ளன. 2 கோடி ரூபா சமுர்த்தி நிதியை மோசடி செய்த வழக்கு, மள்­வானை வீடு தொடர்­பி­லான வழக்கு, கோத்­த­பா­ய­விற்கு எதி­ராக இரண்டு வழக்­குகள் உள்­ளன. ஒன்று அர­சாங்­கத்­திற்கு கிடைக்க வேண்­டிய 1140 கோடி ரூபா தொடர்­பான அவன்ட் கார்ட் வழக்கு. தாய், தந்­தை­யரின் நினை­வி­டங்­களை அமைப்­ப­தற்­காக மக்­களின் பணத்தை பயன்­ப­டுத்­திய வழக்கும் உள்­ளது. அந்த வழக்கு விசேட நீதி­மன்­றத்தில் உள்­ளது. நாம­லுக்கு எதி­ரா­கவும் இரண்டு வழக்­குகள் உள்­ளன. ஒன்று கவர்ஸ் எனப்­படும் நிறு­வ­னத்தில் எவ்­வாறு 3 கோடி ரூபா முத­லீடு செய்தார் என்­பது தொடர்­பான வழக்கு. மற்­றை­யது மற்­று­மொரு நிறு­வ­னத்தில் ஒன்­றரைக் கோடியை முத­லீடு செய்­தது எவ்­வாறு என்­பது தொடர்­பி­லான வழக்கு. அந்த இரண்டு வழக்­கு­களும் டிசம்பர் மாத ஆரம்­பத்தில் வர­வுள்­ளன. இந் நிலை­யில்தான் இந்த ஆட்சி மாற்ற சதி இடம்­பெற்­றுள்­ளது. இதன் பின்­னணி கள்­வர்­களை காப்­பாற்­று­வ­தற்கா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது” என அவர் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதே­போன்­றுதான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கடந்த மூன்று வருட காலங்­களில் இடம்­பெற்ற பல ஊழல்­க­ளுக்குத் துணை போயுள்­ள­தா­கவும் அவர் பகி­ரங்­க­மாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநுர குமார திசா­நா­யக்­கவின் கருத்­து­க­ளின்­படி மைத்­திரி, மஹிந்த மற்றும் ரணில் ஆகிய மூவரும் தத்­த­மது குற்றங் குறை­களை மறைப்­ப­தற்­கான போராட்­டத்­தி­லேயே ஈடு­பட்டு வரு­கி­றார்­களா எனும் சந்­தேகம் எழு­வதைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

ராஜ­பக்ச குடும்­பத்­தினர் தமது வழக்­கு­க­ளி­லி­ருந்து விடு­தலை பெறு­வ­தற்­காக இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி வரு­வ­தையும் பல குற்­றங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் எழுந்­துள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கண்­டியில் நடந்த கூட்­டத்தில் கூறி­யதைப் போன்று, இன்று திகன சம்­பவ சூத்­தி­ர­தா­ரி­களும் பிணையில் வெளி­வந்­துள்­ளனர்.

இவ்­வா­றான நிலை தொடர்­வது மிகவும் ஆபத்தானதாகும். ஆட்சி அதிகாரத்துடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் தமது தனிப்பட்ட நலன்களுக்காகவும் தாம் சம்பந்தப்பட்ட குற்றங்களை மறைப்பதற்காகவும் அரசியலமைப்புடனும் சட்டத்துடனும் விளையாடுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். இதற்கு முற்றுப் புள்ளி வைக்காவிடின் நாடு மேலும் மேலும் பின்னோக்கிச் செல்வதை ஒருபோதும் தடுக்க முடியாது போய்விடும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.